தமிழகத்தில் 22 மாவட்டங்கள் " கொரோனா ஹாட்ஸ்பாட்" என மத்திய அரசு அறிவிப்பு .!

Default Image

இந்தியா முழுவதும் 11933 பாதிக்கப்பட்டு உள்ளனர். கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே இருப்பதால் பிரதமர் மோடி இரண்டாவது முறையாக ஊரடங்கு நீட்டித்தார்.
இந்நிலையில் நாடு முழுவதும் கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட 170 மாவட்டங்களை சிவப்பு மண்டலமாக (ஹாட்ஸ்பாட்) என மத்திய அரசு அறிவித்துள்ளது.
அதில் தமிழகத்தை சார்ந்த சென்னை , திருச்சி ,கோவை ,ஈரோடு ,நெல்லை, வேலூர் திண்டுக்கல் ,விழுப்புரம், திருப்பூர், தேனி, நாமக்கல் போன்ற 22 மாவட்டங்கள் சிவப்பு மண்டலமாக (ஹாட்ஸ்பாட்) என மத்திய அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தினமும்  அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்தியாவில் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் தமிழகம் மூன்றாவது இடத்தில் உள்ளது. தற்போது வரை 1242 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்