பேரறிவாளன் விடுதலையை கொண்டாடுவது ரத்த கண்ணீர் வருகிறது – கே.எஸ்.அழகிரி

Default Image

கொலையாளிகளின் விடுதலையை திருவிழாவாக கொண்டாடும் போது இதயத்தில் இருந்து ரத்த கண்ணீர் வருகிறது என கே.எஸ்.அழகிரி பேட்டி. 

ஸ்ரீபெருபூதூரில் ராஜீவகாந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், இன்றைக்கு ஒருசில துரோக கும்பல் எப்படி மகாத்மா காந்தியை வீழ்த்தினால் தான், தங்களுடையை சிந்தனைகளை, சித்தாந்தத்தை நிலைநிறுத்தலாம் என கருதி கொன்றார்களோ, அதே போல தான் ராஜீவ் காந்தியை கொன்றால் தான் தங்களால் வெற்றி பெற முடியும் என கருதினர்.

ஆனால், அவர்களது கற்பனையில் மண் விழுந்தது. ராஜீவ் காந்தியை கொன்ற போது எங்களது  கண்களில் கண்ணீர் வந்தது. ஆனால், அந்த கொலையாளிகளின் விடுதலையை திருவிழாவாக கொண்டாடும் போது இதயத்தில் இருந்து ரத்த கண்ணீர் வருகிறது. எங்களால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்