நீர்நிலைகளில் மூழ்கி உயிரிழப்பதை தடுக்க CCTV கேமரா..? அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவு..!

Published by
murugan

நீர்நிலைகளில் மூழ்கி உயிரிழப்பதை தடுக்க நீர்நிலைகளில் CCTV கேமரா அமைக்க ஆய்வு செய்து அறிக்கை அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவு 

சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழகத்தில் நீர்நிலைகளில் மூழ்கி உயிரிழப்பதை தடுக்க கடற்கரைகள், அருவிகள் உள்ளிட்ட இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கவும், 24 மணி நேரமும் நீச்சலில் திறமை பெற்ற பாதுகாப்பு குழுவை அமைக்க வேண்டும் என கோட்டீஸ்வரி என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகத்தில் நீர்நிலைகளில் மூழ்கி உயிரிழப்பதை தடுக்க  நீர்நிலைகளில் கண்காணிப்பு கோபுரங்கள், CCTV கேமரா உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள சாத்திய கூறுகள் உள்ளதா..? என்பதை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க  தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு பிறப்பித்தது. விசாரணையை வரும் 22ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Published by
murugan

Recent Posts

“சென்னை சாலைக்கு விஜயகாந்த் பெயரை சூட்ட வேண்டும்!” தேமுதிக கூட்டத்தில் முக்கிய தீர்மானம்.!

“சென்னை சாலைக்கு விஜயகாந்த் பெயரை சூட்ட வேண்டும்!” தேமுதிக கூட்டத்தில் முக்கிய தீர்மானம்.!

தர்மபுரி : இன்று தர்மபுரியில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த…

2 minutes ago

தேமுதிக இளைஞரணி செயலாளராக விஜய பிரபாகர் நியமனம்.!

தருமபுரி : தேமுதிகவின் இளைஞரணி செயலாளராக விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன் நியமிக்கப்பட்டுள்ளார். பிரேமலதாவின் வசம் இருந்த பொருளாளர்…

7 minutes ago

கொல்கத்தா ஹோட்டல் தீ விபத்து: தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 பேர் உட்பட 14 பேர் உயிரிழப்பு.!

கொல்கத்தா : மேற்கு வங்காளத்தின் தலைநகரான கொல்கத்தாவில் உள்ள ஒரு ஹோட்டலில் பயங்கர தீ ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில்…

22 minutes ago

“மாஞ்சோலை தொழிலாளர்களுக்கு விலையின்றி வீடு” – அரசாணை வெளியீடு.!

நீலகிரி : மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு விலையின்றி வீடு வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 20 அடுக்குமாடி குடியிருப்புகளை…

27 minutes ago

“தவெக தொண்டர்களின் செயல் கவலை அளிக்கிறது!” விஜய் வேதனை!

சென்னை : கடந்த ஏப்ரல் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் தவெக சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவையில்…

53 minutes ago

சிறுமி உயிரிழப்பு எதிரொலி : மழலையர் பள்ளி உரிமம் ரத்து!

மதுரை : நேற்று மதுரை கே.கே நகர் பகுதியில் உள்ள ஸ்ரீ கிண்டர் கார்டன் எனும் தனியார் மழலையர் பள்ளியில்…

2 hours ago