கனிம வளத்துறை முன்னாள் இணை இயக்குனர் வீட்டில் சிபிசிஐடி சோதனை.! முன்னாள் அமைச்சருக்கு தொடர்பு.?

Default Image

தர்மபுரியில் இன்று கனிமவளத்துறை முன்னாள் இணைய இயக்குனர் சுரேஷ் அவர்களது வீட்டில் சிபிசிஐடி போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். 

தர்மபுரியில் இன்று சிபிசிஐடி போலீசார் , கனிமவளத்துறை முன்னாள் இணைய இயக்குனர் சுரேஷ் என்பவரது வீட்டில் தீவிர சோதனையில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

இன்று காலை ஆரம்பித்த இந்த சோதனை கடந்த ஒரு மணி நேரத்திற்கும் அதிகமாக நடைபெற்று வருகிறது. கனிமவளத்துறை முன்னாள் இணைய இயக்குனர் சுரேஷ் , முன்னாள் அதிமுக அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு நெருக்கமானவர் என கூறப்படுகிறது.

நேற்று தான், முன்னாள் அதிமுக அமைச்சர்கள், விஜயபாஸ்கர் மற்றும் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் வீட்டில் லஞ்சஒழிப்புத்துறையினரால் சோதனை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்