குரூப் 4 முறைகேடு விசாரணையை சிபிஐக்கு மாற்றம் செய்ய வேண்டும் என மதுரை உயர்நீதிமன்ற கிளையில் முகமது ரஸ்வி என்பவர் முறையீடு செய்து உள்ளார். அதில் ,குரூப் 4 முறைகேடு மட்டுமின்றி சீருடை பணியாளர் தேர்விலும் முறைகேடு நடந்ததாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் சிபிசிஐடி விசாரித்தால் உண்மை வெளியே வராது என்பதால் விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என முகமது ரஸ்வி என்பவர் முறையீடு செய்து உள்ளார்.
மேலும் குரூப்-4 தேர்வு முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணையை உயர்நீதிமன்ற நீதிபதி கண்காணிக்க வேண்டும் என மனுதாரர் கூறியுள்ளார். சமீபத்தில் நடந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் முறைகேடு நடந்ததாக கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் டிஎன்பிஎஸ்சி நடத்திய விசாரணையில் 99 தேர்வர்கள் முறைகேடு செய்தது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் ஈடுபட்ட 99 தேர்வர்களை தகுதி நீக்கம் செய்து வாழ்நாள் முழுதும் தேர்வு எழுத தடை விதித்தது.பின்னர் சிபிசிஐடி போலீசார் மூன்று தனிப்படை அமைத்து குரூப் 4 முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த குரூப் 4 தேர்வு முறைகேடு வழக்கில் நேற்று வரை 12 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பெங்களூர் : பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் இன்றைய ஐபிஎல் போட்டி, மழை காரணமாக 14 ஓவர் போட்டியாக…
சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…
பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…
டெல்லி : செல்போன் கட்டணத்தை கடந்தாண்டு ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகியவை உயர்த்தின. பிஎஸ்என்எல் மட்டும் உயர்த்தவில்லை. இந்நிலையில்,…
சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…
சென்னை : நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை…