அதிமுக பொதுக்குழு விவகாரம்.! உச்சநீதிமன்றத்தில் அதிமுக சார்பில் கேவியேட் மனு தாக்கல்.!

Default Image

அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் ஏற்கனவே, ஓபிஎஸ் தரப்பில் கேவியெட் மனு தாக்கல் செய்துள்ள நிலையில், அதிமுக சார்பிலும் கேவியெட் மனு தக்கல் செய்யப்பட்டுள்ளது.  

எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கடந்த ஜூலை 11 நடந்த அதிமுக பொதுக்குழு விவகாரம் நாளுக்கு நாள் பூதாகரமாக மாறி வருகிறது. சென்னை நீதிமன்றத்தில் ஒற்றை நீதிபதி அமர்வு பொதுக்குழு செல்லாது என்றும், இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு பொதுக்குழு செல்லும் எனவும் மாறி மாறி தீர்ப்பளித்தனர்.

தற்போது இந்த தீர்ப்பை எதிர்த்து ஏற்கனவே ஓபிஎஸ் தரப்பு முதலில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து இருந்தது. பின்னர், இபிஎஸ் தரப்பு தங்கள் தரப்பு நியாயத்தை கேட்க வேண்டும் என கேவியெட் மனு தாக்கல் செய்திருந்தது.

அதனை அடுத்து, ஓபிஎஸ் ஆதரவாளர் வைரமுத்து, பொதுக்குழு செல்லும் என்ற உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்து இருந்தது. அதனை தொடர்ந்து, தற்போது அதிமுக கட்சி சார்பில் கட்சியின் தலைமை நிலை செயலர் கேவியெட் மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்து உள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்