காவிரி நதிநீர் பங்கீடு பிரச்சனை: டெல்டா மாவட்டங்களில் 11ம் தேதி முழு அடைப்பு போராட்டம்!

Published by
பாலா கலியமூர்த்தி

காவிரியில் இருந்து நீர் திறக்க மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து, தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் வரும் 11-ஆம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் தமிழகம் மற்றும் கர்நாடகா மாநிலம் இடையே பிரச்சனை அதிகரித்துக்கொண்டே வருகிறது. தமிழகத்திற்கு உச்சநீதிமன்றம், காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவின்படி தேவையான அளவு தண்ணீர் வழங்க வேண்டும் என தமிழக அரசும், தங்களிடம் போதிய அளவு தண்ணீர் இல்லை என கர்நாடக அரசும் தொடர்ந்து முறையிட்டு வருகின்றனர்.

இந்த விவகாரமானது காவிரி ஒழுங்காற்று குழு, காவிரி மேலாண்மை வாரியம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஏற்கனவே கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் தமிழத்திற்கு வினாடிக்கு 3000 கனஅடி நீர் திறந்து விட வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டது. அதே நேரத்தில் காவிரி விவகாரம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு விசாரணையிலும் காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவை செயல்படுத்த கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால், கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விட முடியாது என மறுத்து வருகிறது. காவிரியில் இருந்து தண்ணீர் திறந்துவிட  உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து கர்நாடகாவில் முழு அடைப்பு உள்ளிட்ட பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதே போல தண்ணீர் திறந்துவிட மறுக்கும் கர்நாடக அரசுக்கு எதிராகவும் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன.

இதனிடையே, காவிரியில் இருந்து தண்ணீர் திறந்து விட முடியாது. தங்களிடம் போதிய அளவு தண்ணீர் இல்லை என காவிரி மேலாண்மை வாரியத்தில் கர்நாடக அரசு முறையிட்டது. இதனை தொடர்ந்து 88வது காவிரி ஒழுங்காற்றுக் குழுக் கூட்டம் வரும் அக்டோபர் 12ஆம் தேதி டெல்லியில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், காவிரியில் இருந்து நீர் திறக்க மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து டெல்டா மாவட்டங்களில் வரும் 11-ஆம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியகத்தின் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என திமுக விவசாய அணி செயலாளர் ஏ.கே.எஸ் விஜயன் அறிவித்துள்ளார். கர்நாடகாவிடம் இருந்து தண்ணீரை பெற்று தராத மத்திய அரசை கண்டித்து கடையடைப்பு போராட்டம் என்றும் மத்திய அரசின் அலுவலங்கள் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபடவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

சிஎஸ்கே தொடர் தோல்வி…விமர்சனங்கள் குறித்து மௌனம் கலைத்த அஸ்வின்!

சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எந்த அளவுக்கு மோசமாக விளையாடமுடியுமோ அந்த அளவுக்கு இந்த சீசனில் விளையாடி வருவதாக…

24 minutes ago

அமித்ஷா வருகை., “அதற்கும் இதற்கும் சம்பந்தமில்லை.,” அண்ணாமலை பேட்டி!

சென்னை : தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இன்னும் ஓராண்டு காலமே உள்ளதால் தற்போதே அரசியல் தேர்தல் களம் பரபரக்க…

1 hour ago

கோவை தனியார் பள்ளி விவகாரம் – பள்ளியின் முதல்வர் சஸ்பெண்ட்!

சென்னை : கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், கடந்த ஏப்ரல் 5-ம் தேதி பூப்பெய்திய…

1 hour ago

அண்ணாமலைக்கு வாய்ப்பு இல்லை? புதிய பாஜக மாநிலத் தலைவர் தேர்தல் அறிவிப்பு இதோ…

சென்னை : இன்னும் ஓராண்டில் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் பதவியில்…

1 hour ago

இந்த அஜித்தை தான் நாங்க எதிர்பார்த்தோம்! குட் பேட் அக்லியை கொண்டாடும் அஜித் ரசிகர்கள்!

சென்னை : அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள குட் பேட் அக்லி படத்தை பார்த்த அஜித் ரசிகர்கள் படம் தாறுமாறாக இருப்பதாக தங்களுடைய…

2 hours ago

அதிமுக நிலைப்பாடு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்.!

சென்னை : நேற்றைய தினம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலலகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை…

4 hours ago