காவிரி விவகாரம் தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன், எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!

Published by
Venu

தமிழக எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் காவிரி விவகாரத்தில் அனைத்துக் கட்சி தலைவர்களை சந்திக்க பிரதமர் மறுப்பதால், சட்டப்பேரவையை கூட்டி தீர்மானம் நிறைவேற்ற முதலமைச்சர் உறுதியளித்துள்ளதாக  தெரிவித்துள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்துவது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி- எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் தலைமை செயலகத்தில் இன்று ஆலோசனை நடத்தினர். காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், கடந்த மாதம் 16-ந்தேதி தீர்ப்பு வழங்கியது.

அதில், தமிழகத்துக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட தண்ணீரின் அளவை குறைத்து, கர்நாடகத்துக்கு கூடுதலாக 14.75 டி.எம்.சி. தண்ணீர் எடுக்க அனுமதி வழங்கியது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இது தொடர்பாக கடந்த மாதம் 22ம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில், வரும் 7ம் தேதி கர்நாடகாவில் அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, இன்று ஆலோசனைக் கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தி ஒருவாரம் ஆன நிலையிலும், பிரதமர் தமிழக அனைத்துக் கட்சி தலைவர்களை சந்திக்க மறுப்பதாக கூறினார். பிரதமரின் இந்த நடவடிக்கை அதிர்ச்சி அளிப்பதாக கூறிய ஸ்டாலின், கர்நாடக தேர்தலை மையமாக வைத்து பிரதமர் செயல்படுவதாக குற்றம் சாட்டினார். மேலும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க இயலாது என்று தெரிவித்த அமைச்சரை சந்திப்பதால் எந்த பயனும் இல்லை என்று தெரிவிதார்.

முதல்வர் தலைமையிலான அனைத்துக்கட்சி குழுவை சந்திக்க பிரதமர் மறுப்பது தமிழகத்துக்கு அவமானம் என்றும் மத்திய அரசின் பாராமுக நடவடிக்கையை கண்டித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தினார். அப்போது, வரும் திங்கள் கிழமை வரை பொறுத்திருந்து பார்க்கலாம் என முதல்வர் கூறியதாக குறிப்பிட்ட ஸ்டாலின், அதுவரை மத்திய அரசிடம் இருந்து நடவடிக்கை இல்லாத பட்சத்தில் வரும் 8ம் தேதி பேரவையை கூட்டி தீர்மானம் நிறைவேற்ற உறுதியளித்ததாக கூறினார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

44 mins ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

2 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

3 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

3 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

3 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

3 hours ago