எதிர்க்கட்சித் தலைவரும் திமுக செயல் தலைவருமான முக.ஸ்டாலின் தமிழக மக்களின் நீராதாரத்தை காத்திட, உடனடியாக சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக முதல்வருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், மத்திய அரசு காவிரி விவகாரத்தில் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்படுவதால், தமிழக அரசின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும் பொருட்டு, சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும் என்று ஏற்கனவே வலியுறுத்தியதாக கூறியுள்ளார்.
கர்நாடக சட்டமன்ற தேர்தலை மனதில் வைத்து அதிகாரிகள் மட்டத்தில் ஆலோசனை எனும் கண் துடைப்பு நாடகத்தை மத்திய அரசு நடத்தியுள்ளதாக குற்றம்சாட்டியுள்ள ஸ்டாலின் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு 3 வாரங்கள் கடந்த நிலையிலும், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க முன்வராதது நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது என குறிப்பிட்டுள்ளார்.
கர்நாடகத் தேர்தலுக்காகக் கண்துடைப்பு நாடகம் நடத்தும் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் உடனடியாக சிறப்புக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
திண்டுக்கல் : ஆந்திரப் பிரதேசம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்களில் மிருக கொழுப்பு கலந்திருந்ததாக அம்மாநில முதலமைச்சர்…
சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.600 அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று 1 கிராம் தங்கம் ரூ.6,885க்கும்,…
பெய்ரூட்: லெபனானில் பேஜர், வாக்கி டாக்கி வெடித்த சம்பவத்தை தொடர்ந்து நேற்று இஸ்ரேல் வான்வெளி தாக்குதலை மேற்கொண்டனர். இந்த தாக்குதலில்…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், இந்த அளவுக்கு ஒரு பிரச்சினை பெரிதாக வெடிக்கும் என யாரும் நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டோம்.…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எப்போது துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்று தமிழக அரசியல்…
சென்னை : நடிகை பார்வதி நாயர் கடந்த 2022 -ம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி, தனது வீட்டில் வேலை…