சாதிவாரி கணக்கெடுப்பு! முதல்வரை சந்திக்க உள்ளேன் – பாமக நிறுவனர் ராமதாஸ்!

Published by
பாலா கலியமூர்த்தி

சாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் பல தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புடன், சாதிவாரி கணக்கெடுப்பையும் இணைத்து நடத்த வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் சமீபத்தில் கடிதம் எழுகியிருந்தார். அதுமட்டுமில்லாமல், தமிழகத்தில் பாமக சார்பிலும் சமூக நீதியை காப்பதற்காக சாதிவாரியாக மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

அந்தவகையில், பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் சென்னை தி.நகரில் உள்ள சர் பி.டி.தியாகராயர் அரங்கில் சாதிவாரியாக மக்கள்தொகையை கணக்கெடுப்பது தொடர்பாக கருத்தரங்கம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், ஜி.கே.மணி எம்.எல்.ஏ, முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே.மூர்த்தி, சுதர்சன நாச்சியப்பன், வக்கீல் பாலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஆசிய பாரா விளையாட்டு: சாதனை படைத்த இந்தியா! பிரதமர் மோடி பெருமிதம்!

அப்போது பேசிய, பாமக நிறுவனர் ராமதாஸ், சாதிவாரி கணக்கெடுப்பு தவிர்க்க முடியாதது. சாதிவாரி கணக்கெடுப்பை எதிர்ப்பவர்கள் சமூக நீதிக்கு எதிரானவர்கள். இடஒதுக்கீடு என்பது ஒவ்வொரு மக்களின் சமூக நிலை, கல்வி நிலை மற்றும் மக்கள் தொகையை வழங்குவது தான். சாதிவாரி கணக்கெடுப்பு முழுமையாக நடத்தப்பட்டால் தான் சமூகநீதியை நிலை நிறுத்த முடியும்.  சமூகநீதியே எங்கள் உயிர்மூச்சு என கூறும் திமுக இதை பற்றி மூச்சுக்கூட விடவில்லை. எனவே, தமிழ்நாட்டில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கோரி முதலமைச்சரை சந்திக்க உள்ளேன். ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கோரி ஏற்கனவே கலைஞர் அவர்களை சந்தித்தேன்.

தற்போது, முதல்வர் முக ஸ்டாலினை சந்திக்க உள்ளேன் என தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து கருத்தரங்கில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என 44 ஆண்டுகளாக பாமக நிறுவனர் ராமதாஸ் போராடி வருகிறார். அனைத்து சமுதாய மக்களின் நிலையை அறிய சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மறுக்கும் ஆட்சியாளர்கள் சமூகநீதி குறித்து பேசுவது ஏன்?. மாநில அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் தான் அனைத்து சாதியினரின் சமுதாய நிலையை அறிய முடியும்.

இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலுக்கு இந்தியாவும் ஒரு காரணம்.? ஜோ பைடன் அதிர்ச்சி தகவல்.!

ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கு சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம். சாதிவாரி கணக்கெடுப்பை மாநில அரசே நடத்தலாம். சாதிவாரி கணக்கெடுப்பை ஒரு சாதிக்காக மட்டும் கேட்கவில்லை, தமிழக வளர்ச்சிக்காகவே கேட்கிறோம். சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு தான் நடத்த வேண்டும், மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என திமுக சொல்கிறது. தூங்குபவர்களை எழுப்பலாம், தூங்குவதுபோல் நடிப்பவர்களை எழுப்ப முடியாது. சாதி என்றால் கெட்ட வார்த்தை அல்ல, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் அரசியல் பிரச்சனை வரும் என்று சொல்லலாம், ஆனால், கணக்கெடுப்பு நடத்தவிட்டாலும் அரசியல் பிரச்சனை வரும் என கூறியுள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

மியான்மரில் பயங்கர நிலநடுக்கம் : “ஆபரேஷன் பிரம்மா” உதவிகரம் நீட்டிய இந்தியா!

பாங்காக் : மியான்மரில் கடந்த மார்ச் 28-ஆம் தேதி அன்று ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து,…

23 minutes ago

அப்போ கே.எல்.ராகுல்…இப்போ ரிஷப் பண்ட்? டென்ஷனாகி திட்டிய லக்னோ உரிமையாளர்!

லக்னோ :  சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்காவுக்கு கடந்த சில ஆண்டுகளாக கேப்டன்களால் டென்ஷன் தொடர்கிறது…

49 minutes ago

இன்று கூடுகிறது சட்டப்பேரவை… கச்சத்தீவை திரும்பப் பெற வலியுறுத்தி ஒரு தனித்தீர்மானம்!

சென்னை : இன்று, ஏப்ரல் 2-ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூடுகிறது. மூன்று நாட்கள் இடைவெளிக்குப் பிறகு, நேற்று பேரவை கூடிய…

1 hour ago

லக்னோ படு தோல்வி..பார்முக்கு எப்போ வருவீங்க ரூ.27 கோடி ரிஷப் பண்ட்?

லக்னோ : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணி, பஞ்சாப்…

2 hours ago

எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பு…இன்று வக்பு வாரிய திருத்த சட்ட மசோதா தாக்கல்!

டெல்லி : இன்று ஏப்ரல் 2, 2025, மற்றும் நாளை (ஏப்ரல் 3, 2025) மக்களவையில் வக்பு வாரிய திருத்த…

2 hours ago

LSG vs PBKS : சொந்த மண்ணில் வீழ்ந்தது லக்னோ! 17வது ஓவரில் பஞ்சாப் அசத்தல் வெற்றி!

லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் , பஞ்சாப் கிங்ஸ் அணியும் விளையாடின. இதில்…

9 hours ago