பள்ளிகளில் சாதிய பாகுபாடு – தவறு செய்தவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவர் – அமைச்சர் அன்பில் மகேஷ்

Default Image

சாதிய பாகுபாடு குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி. 

தென்காசி மாவட்டம் பாஞ்சாகுளம் பள்ளியில் படிக்கும் மாணவர்களிடத்தில், ஆசிரியர்கள் சாதி பாகுபாடு பார்ப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், இச்சம்பவம் தமிழகத்தில் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பின் மகேஷ் அவர்கள் பள்ளிகளில் சாதிய பாகுபாடு குறித்து தலைமை ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மேலாண்மை குழுவினர் கண்காணிக்க வேண்டும் என்றும், சாதிய பாகுபாடு குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை தொடங்கப்பட்டுள்ள காலை சிற்றுண்டி திட்டமானது விரைவில் மற்ற மாணவர்களுக்கும் அறிமுகப்படுத்தப்படும் என்றும், இத்திட்டம் குறித்த அறிவிப்பை முதல்வர் விரைவில் வெளியிடுவார் என்றும் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்