சென்னை ஐஐடியில் சாதி ரீதியான பாகுபாடு…! ஐஐடி-யில் இருந்து வெளியேறுவதாக நிர்வாகத்திற்கு கடிதம் அனுப்பிய உதவி பேராசிரியர்…!

Published by
லீனா

சென்னை ஐஐடியில் சாதி ரீதியான பாகுபாடு இருப்பதாக ஐஐடி-யில் இருந்து வெளியேறுவதாக நிர்வாகத்திற்கு கடிதம் அனுப்பிய உதவி பேராசிரியர்.

சென்னை ஐஐடியில் சாதி ரீதியான பாகுபாடு இருப்பதாக அவ்வப்போது குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளது. இதுதொடர்பாக பல்வேறு சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. அந்தவகையில், 2019-ஆம் ஆண்டு மாணவி பாத்திமா தற்கொலை செய்த போது ஐஐடியில் சாதி பாகுபாடு இருப்பதாக மாணவர்கள் புகார் அளித்திருந்தனர்.

இந்த நிலையில் மானுடவியல் மற்றும் சமூகவியல் துறையில் உதவி பேராசிரியராக பணியாற்றி வந்த விபின் என்பவர் தான் வேலை பார்க்கக்கூடிய துறையில் சாதி பாகுபாடு இருப்பதாகவும், இதை பலமுறை நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றபோதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதன் காரணமாக, தான் பணியில் இருந்து வெளியேறுவதாகவும், வேறு நிறுவனத்திற்கு செல்கிறேன் என்று மின்னஞ்சல் மூலமாக ஐஐடி நிர்வாகத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளார். இது ஐஐடி நிர்வாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், அந்த கடிதத்தில் மற்றொரு தகவலையும் தெரிவித்துள்ளார். இந்த ஐஐடியில் நிகழக்கூடிய சாதி ரீதியான பாகுபாடு குறித்து முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும். தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடிநல ஆணைய உறுப்பினர்களை உள்ளடக்கிய விரிவான ஒரு அமைப்பை ஏற்படுத்தி முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற ஒரு கோரிக்கையையும் முன்வைத்துள்ளார். ஆனால் உதவி பேராசிரியரின் கடிதம் தொடர்பாக, ஐஐடி நிர்வாகம் இதுவரை எந்த அதிகாரபூர்வ விளக்கத்தையும் அளிக்கவில்லை.

Published by
லீனா

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

2 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

8 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

8 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

8 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

8 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

8 hours ago