முந்திரி கடத்தல் வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் மகனை தொடர்ந்து மேலும் 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது.
தூத்துக்குடியிலிருந்து லாரியில் முந்திரியை கடத்தியதாக நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியனின் மகன் ஞானராஜ் ஜெபசிங் உட்பட 7 பேரை கடந்த நவம்பர் 27-ஆம் போலீசார் கைது செய்தனர். முந்திரி கடத்தல் வழக்கில் ஜெபசிங், விஷ்ணுகுமார், மனோகரன்,மாரிமுத்து, ராஜகுமாரன், செந்தில்குமார் மற்றும் பாண்டி ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதனைத்தொடர்ந்து, முந்திரி பருப்பு லாரியை கடத்திய வழக்கில் கைதான அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியனின் மகன் ஞானராஜ் ஜெபசிங்கை குண்டர் சட்டத்தில் அடைக்க மாவட்ட ஆட்சியர் நேற்று உத்தரவிட்டார். இந்த நிலையில், லாரியுடன் ரூ.1.10 கோடி மதிப்புள்ள முந்திரி கடத்தப்பட்ட வழக்கில் மேலும் 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
வழக்கில் கைதான மாரிமுத்து, செந்தில் முருகன், ராஜகுமாரன், விஷ்ணுபெருமாள் ஆகியோர் மெது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியனின் மகன் ஞானராஜ் ஜெபசிங்கை தொடர்ந்து மேலும் 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
காலி : இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி, இரண்டு டெஸ்ட் தொடர் மற்றும் இரண்டு ஒருநாள் தொடரில் விளையாடி…
சென்னை : இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நெல்லை மாவட்டத்திற்கு முதல்வர் ஸ்டாலின் இன்று செல்கிறார். காலை 11 மணிக்கு நெல்லை வரும்…
சென்னை : ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கிடையே இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் அர்ஜுன், த்ரிஷா, ரெஜினா என பலர் நடித்துள்ள…
சென்னை : ஒரு பக்கம் அஜித்தின் விடாமுயற்சி படம் வெளியாகவிருக்கும் நிலையில், மறுபக்கம் கார் ரேஸுக்கு தயாராகி வருகிறார். அஜித்…
நெல்லை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் அரசுமுறைப் பயணமாக இன்று திருநெல்வேலிக்கு செல்கிறார். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்…
டெல்லி : மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்கு ஒரே…