இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.தமிழகத்தில் இரண்டாம் கட்டமாக தேர்தல் ஏப்ரல் 18 -ஆம் தேதி நடைபெற உள்ளது.தமிழகத்தில் மக்களவை தேர்தலோடு சேர்த்து 21 சட்டமன்றத் தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெறுகிறது.
தேர்தல் அன்று நடைபெறும் சித்திரை திருவிழா:
இந்நிலையில் தமிழகத்தில் ஏப்ரல் 18 -ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள அதே தேதியில் தான் தமிழகத்தில் மிகவும் புகழ்பெற்ற மதுரையில் சித்திரை திருவிழா நடைபெறுகிறது.இந்த விழாவில் வருடா வருடம் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
தேர்தலை ஒத்தி வைக்கக்கோரி வழக்கு:
இந்நிலையில் மதுரை சித்திரை திருவிழாவிற்காக தேர்தலை ஒத்தி வைக்கக்கோரிய வழக்கின் விசாரணை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது.இதில் பதில் அளித்த தேர்தல் ஆணையம்,தேர்தலை ஒத்திவைக்க முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.மேலும் தமிழக அரசின் முடிவை கேட்ட பின்னரே தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது.ஏற்கனவே இரவு 8 மணி வரை கூடுதல் நேரம் மட்டுமே வழங்க முடியும்.மேலும் கிறித்துவ பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளை மாற்ற முடியாது என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
வழக்கின் விசாரணையில் நாளை தீர்ப்பு:
இதன் பின்னர் மதுரை சித்திரை திருவிழாவிற்காக தேர்தலை ஒத்தி வைக்கக்கோரிய வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…