கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ஈபிஎஸ், சசிகலா உள்ளிட்டோரை விசாரிக்க கோரும் வழக்கு செப்.27 க்கு ஒத்திவைப்பு.
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கூடுதலாக சிலரை விசாரிக்கக்கோரும் மனு மீது காவல்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து, வழக்கு விசாரணையை செப்டம்பர் 27-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து.
கோடநாடு வழக்கில் குற்றச்சாட்டப்பட்ட தீபு, சதீசன், சந்தோஷ் சாமி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடுத்திருந்தனர். இவர்களது மனுவில், கோடநாடு தொடர்பாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சசிகலா, இளவரசி, சுதாகரன், நீலகிரி முன்னாள் ஆட்சியர் சங்கர், முன்னாள் எஸ்பி முரளி ரம்பா உள்ளிட்ட 8 பேரை விசாரிக்கக்கோரி கோரிக்கை வைத்திருந்தனர்.
இந்த வழக்கு இன்று நீதிபதி நிர்மல்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, கூடுதலாக சிலரை விசாரிக்க வேண்டும் என்பதற்கான காரணத்தை மனுதாரர்கள் விளக்கமாக கூறவில்லை என்றும் ஏன் அவர்களை விசாரிக்க வேண்டும் என விரிவான காரணங்களை தாக்கல் செய்யும்படி மனுதாரர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அதே சமயம் இந்த வழக்கு தொடர்பாக காவல்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை செப்டம்பர் 27-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…