ஈபிஎஸ், சசிகலா உள்ளிட்டோரை விசாரிக்க கோரும் வழக்கு – செப்.27 க்கு ஒத்திவைப்பு!

Published by
பாலா கலியமூர்த்தி

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ஈபிஎஸ், சசிகலா உள்ளிட்டோரை விசாரிக்க கோரும் வழக்கு செப்.27 க்கு ஒத்திவைப்பு.

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கூடுதலாக சிலரை விசாரிக்கக்கோரும் மனு மீது காவல்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து, வழக்கு விசாரணையை செப்டம்பர் 27-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து.

கோடநாடு வழக்கில் குற்றச்சாட்டப்பட்ட தீபு, சதீசன், சந்தோஷ் சாமி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடுத்திருந்தனர். இவர்களது மனுவில், கோடநாடு தொடர்பாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சசிகலா, இளவரசி, சுதாகரன், நீலகிரி முன்னாள் ஆட்சியர் சங்கர், முன்னாள் எஸ்பி முரளி ரம்பா உள்ளிட்ட 8 பேரை விசாரிக்கக்கோரி கோரிக்கை வைத்திருந்தனர்.

இந்த வழக்கு இன்று நீதிபதி நிர்மல்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, கூடுதலாக சிலரை விசாரிக்க வேண்டும் என்பதற்கான காரணத்தை மனுதாரர்கள் விளக்கமாக கூறவில்லை என்றும் ஏன் அவர்களை விசாரிக்க வேண்டும் என விரிவான காரணங்களை தாக்கல் செய்யும்படி மனுதாரர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அதே சமயம் இந்த வழக்கு தொடர்பாக காவல்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை செப்டம்பர் 27-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

9 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

11 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

11 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

11 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

11 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

12 hours ago