சூதாட்ட நிறுவனங்களுக்கு விளம்பரத்தில் நடித்த கிரிக்கெட் வீரர் கோலி மற்றும் நடிகை தமன்னா உள்ளிட்டோரையும் கைது செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு.
சென்னையை சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையானதால் சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து, ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கக்கோரி வழக்கறிஞர் சூரியபிரகாசம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் ஒன்றை செய்துள்ளார். அந்த மனுவில், நேரடி சூதாட்டத்திற்கு தடை செய்யப்பட்ட நிலையில், ஆன்லைன் சூத்தாட்டங்கள் அதிரிகரித்து வருகிறது. ஆரம்ப காலத்தில் பொழுதுபோக்கிற்காக விளையாடும் இளைஞர்கள், பின்னர் அதற்கு அடிமையாகும் சூழல் உருவாகுகிறது என்று தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் வீரர் விராட் கோலி மற்றும் நடிகை தமன்னா உள்ளிட்ட பிரபலங்களை வைத்து விளம்பரங்கள் வெளியிட்டு இளைஞர்கள் கவரப்படுகின்றனர் என்று குற்றசாட்டியுள்ள அவர், ஆன்லைன் சூதாட்டத்திற்காக வட்டிக்கு பணம் வாங்கி பின்னர் திரும்ப கொடுக்க முடியாமல் தற்கொலை செய்து கொள்கின்றனர். இதற்குமுன் ப்ளுவேல் விளையாட்டால் மாணவர்கள் தற்கொலைக்கு தூண்டப்படுவதை அடுத்து உயர் நீதிமன்றம் தடை செய்யப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார். ஆன்லைன் சூதாட்டம் ஆபத்தானது என்பதால் நீதிமன்றம் உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுள்ளார்.
மேலும், ஆன்லைன் சூதாட்டத்தை நிர்வகித்து வருபவர்களை கைது செய்து தகுந்த நடவடிக்கை எடுப்பதோடு, அத்தகையை சூதாட்ட நிறுவனங்களுக்கு விளம்பரத்தில் நடித்த இந்திய கிரிக்கெட் வீரர் கோலி மற்றும் நடிகை தமன்னா உள்ளிட்டோரையும் கைது செய்ய வேண்டும் என்றும் கோரியுள்ளார். இந்த மனுவை விசாரித்த சென்னை உய்ரநீதிமன்றம் நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வு மனு தொடர்பாக மத்திய மாநில அரசுகள் அடுத்த மூன்று வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
2025 ஐசிசி சாம்பியன்ஸ் இறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 2025 ஐசிசி சாம்பியன்ஸ் பட்டத்தை…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியானது இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
வாஷிங்டன் : டொனால்ட் டிரம்ப் அமெரிங்க அதிபராக பொறுப்பேற்ற பிறகு பல்வேறு அதிரடி முடிவுகளை, முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மற்ற…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியானது இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சென்னை : கோடைகாலம் ஆரம்பித்து தமிழகத்தில் அடுத்தடுத்த நாட்களில் வெயிலின் தாக்கம் சற்று அதிகரிக்க கூடும் என்று கூறப்பட்டுள்ள நிலையில்,…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. ரோஹித்…