பாஜகவில் இணைந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை மீது வழக்குப்பதிவு!

Default Image

பாஜகவில் இணைந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை, எஸ்.ஆர். சேகர் உட்பட 5 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் கோவை போலீசார் வழக்குப்பதிவு.

கர்நாடகாவில் ஐ.பி.எஸ் அதிகாரியாக பணியாற்றி வந்த தமிழகத்தைச் சேர்ந்த அண்ணாமலை, கடந்ததினங்களுக்கு முன் தனது பணியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து, அண்ணாமலை பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் பா.ஜ.க.வில் இணைந்தார்.

அதன்பின் தமிழகம் வந்த அவருக்கு கோவை மாவட்ட பா.ஜ.க அலுவலகம் முன்பு நேற்று ஊரடங்கு உத்தரவை மீறி வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதனையடுத்து, அண்ணாமலை, எஸ்.ஆர். சேகர் உட்பட ஐந்து பேர் மீது கோவை காட்டூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

அவர்மீது ஊரடங்கு விதிமுறைகளை மீறுதல், நோய் பரவும் வகையில் செயல்பட்டது உட்பட 5 பிரிவுகளின் கீழ் காட்டூர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live
live ilayaraja
ilaiyaraaja symphony london
rahul gandhi bjp
good bad ugly - gv prakash
India vs New Zealand Final
tvk poster