சேலத்தில் நேற்று தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய அதிமுக ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்பட பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் கடந்த 12 ஆம் தேதி போராட்டம் நடந்த திட்டமிட்டு இருந்தனர். ஆனால், கடந்த 8-ஆம் தேதி குன்னூர் அருகே நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி உயிரிழந்ததை தொடர்ந்து போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, இந்த போராட்டம் நேற்று நடைபெற்றது.
நேற்று போராட்டத்தின் போது பேசிய எடப்பாடி பழனிசாமி, சேலம் என்றால் அது அதிமுகவின் கோட்டை ; அதிமுகவை எவராலும் அசைத்து பார்க்க முடியாது. அதிமுகவை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது. தொண்டனை கூட தொட்டுப்பார்க்க முடியாது. 7 மாதகால திமுக ஆட்சியில் மக்கள் துன்பப்பட்டு வருகின்றனர். திமுக மக்களை ஏமாற்றி கொல்லைப்புறம் வழியாக ஆட்சிக்கு வந்துள்ளது என தெரிவித்தார்.
இந்நிலையில், சேலத்தில் நேற்று தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய எடப்பாடி பழனிச்சாமி உள்பட பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவ காரணமாக இருத்தல் உள்பட 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ கிரிக்கெட் மைதானத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியும்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
ஸ்ரீநகர் : இன்று பிற்பகல் 3 மணி அளவில் ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்திற்கு சுற்றுலா சென்ற பயணிகள் மீது…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள்…
சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா, நடிப்பை தாண்டி கார் பந்தயத்திலும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார். ஏற்கனவே அஜித்குமார்…