ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயற்சி.. கே.எஸ். அழகிரி உள்பட 143 பேர் மீது வழக்குப் பதிவு.!

Default Image

தடையை மீறி ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயற்சி செய்ததாக கூறி கே.எஸ். அழகிரி உள்பட 143 பேர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் அரசியல் குழப்பம் நிலவி வரும் நிலையில், அந்த மாநில ஆளுநரை கண்டித்து நேற்று தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயற்சித்தனர். இதனால் கே.எஸ்.அழகிரி உள்பட சுமார் 140 பேரை காவல்துறை கைது செய்தனர்.

காங்கிரஸ் கட்சியினர் கைதை கண்டித்து பல இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னர் கைது செய்யப்பட்ட காங்கிரஸ் கட்சியினர் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில், கே.எஸ். அழகிரி 143 பேர் மீது சட்டவிரோதமாக கூடுதல், நோய் பரப்பும் வகையில் செயல்படுதல் உள்ளிட்ட பிரிவுகளில் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்