விருதுநகரில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் சிபிசிஐடி போலீஸார் இறுதிக்கட்ட விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகரில் பட்டியலின பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் ஹரிஹரன், ஜுனத் அகமத், மாடசாமி, பிரவீன் மற்றும் பள்ளி மாணவர்கள் 4 பேர் என மொத்தம் 8 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டுள்ள 8 பேர் மீது சிபிசிஐடி போலீசார் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது.
இந்த வழக்கில் கைதான ஹரிஹரன், ஜுனைத் அகமத் உள்ளிட்ட 4 பேரை சிபிசிஐடி போலீசார் காவலில் எடுத்து 6 நாட்கள் விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இந்நிலையில், பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதானவர்களிடம் பெற்ற வாக்கு மூலங்களை ஆவணப்படுத்தும் பணியில் சிபிசிஐடி போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
காவலில் எடுக்கப்பட்ட ஹரிஹரன், பிரவீன், ஜுனத் அகமது, மாடசாமி ஆகியோரிடம் 5-வது நாளாக சிபிசிஐடி விசாரணை நடைபெற்று வருகிறது. போலீஸ் காவல் நாளை மாலை 5 மணியுடன் முடியும் நிலையில் இன்று இறுதி கட்ட விசாரணையை முடிக்க சிபிசிஐடி திட்டமிடப்பட்டுள்ளது. விருதுநகர் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதானவர்களை நீதிமன்ற காவலுக்கு ஒப்படைக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் கூட்டத்தொடரில் சுற்றுலாத்துறை மற்றும் இந்து சமய அறநிலையத்துறையின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம்…
சென்னை : அதிமுக – பாஜக வருகின்ற 2026 சட்டமன்றத்தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக அறிவித்தததை தொடர்ந்து ஆட்சியில் பங்கு அதிகாரத்தில்…
சென்னை : ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்ற குரல் தற்போது தமிழக அரசியலில் மிக அதிகமாக ஒலித்து கொண்டிருக்கின்றன.…
சென்னை : 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணி அமைத்துள்ளதாக மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவித்திருந்தார். இந்த…
டெல்லி : நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதியது.…
சென்னை : கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை உயர்ந்து இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சி கொடுத்து வரும் நிலையில், ஏப்ரல் 16,…