எரிபொருள் விலையேற்றத்தை பொறுத்து ஆட்டோ கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும் என்ற வழக்கில் அரசு தரப்பு பதிலளிக்க வேண்டும் என வழக்கு தள்ளி வைக்கப்பட்டது.
கடந்த 2015 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஆட்டோ கட்டணம் எரிபொருள் விலை ஏற்றத்திற்கு ஏற்ப மாற்றியமைக்கப்பட்டது. அதற்கு பிறகு 7 ஆண்டுகள் ஆகியும் இன்னும் மறு நிர்ணயம் செய்யப்படவில்லை. இதனால் ஆட்டோ ஓட்டுனர்களே உயர்த்தி வசூலித்து வருகிறார்கள். என சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் ராமமூர்த்தி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.
அதில், மேலும் குறிப்பிடுகையில் எரிபொருள் விலையேற்றத்தை பொறுத்தே கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும் என கடந்த ஏப்ரல் மாதம் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது எனவும் சுட்டிக்காட்டினார். மேலும், குறிப்பிட்ட கால இடைவெளியில் ஆட்டோ கட்டணத்தை தானாகவே மாற்றியமைக்கும் வகையில் தொழில்நுட்பம் அமல்படுத்த வேண்டும் எனவும் அந்த மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.
இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற பொறுப்பு நீதிபதி டி.ராஜா மற்றும் டி.கிருஷ்ணகுமார் ஆகியோர் அடங்கிய உயர்நீதிமன்ற அமர்வு கூறுகையில் இது குறித்து அரசு தரப்பு பதிலளிக்க வேண்டும் என கூறி வழக்கை இன்னும் நான்கு வாரங்களுக்கு தள்ளி வைத்தனர்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…