எரிபொருள் விலையேற்றம்… ஆட்டோ கட்டணம் நிர்ணயம்.! அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு.!

Default Image

எரிபொருள் விலையேற்றத்தை பொறுத்து ஆட்டோ கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும் என்ற வழக்கில் அரசு தரப்பு பதிலளிக்க வேண்டும் என வழக்கு தள்ளி வைக்கப்பட்டது.

கடந்த 2015 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஆட்டோ கட்டணம் எரிபொருள் விலை ஏற்றத்திற்கு ஏற்ப மாற்றியமைக்கப்பட்டது. அதற்கு பிறகு 7 ஆண்டுகள் ஆகியும் இன்னும் மறு நிர்ணயம் செய்யப்படவில்லை. இதனால் ஆட்டோ ஓட்டுனர்களே உயர்த்தி வசூலித்து வருகிறார்கள். என சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் ராமமூர்த்தி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.

அதில், மேலும் குறிப்பிடுகையில் எரிபொருள் விலையேற்றத்தை பொறுத்தே கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும் என கடந்த ஏப்ரல் மாதம் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது எனவும் சுட்டிக்காட்டினார். மேலும், குறிப்பிட்ட கால இடைவெளியில் ஆட்டோ கட்டணத்தை தானாகவே மாற்றியமைக்கும் வகையில் தொழில்நுட்பம் அமல்படுத்த வேண்டும் எனவும் அந்த மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.

இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற பொறுப்பு நீதிபதி டி.ராஜா மற்றும் டி.கிருஷ்ணகுமார் ஆகியோர் அடங்கிய உயர்நீதிமன்ற அமர்வு கூறுகையில் இது குறித்து அரசு தரப்பு பதிலளிக்க வேண்டும் என கூறி வழக்கை இன்னும் நான்கு வாரங்களுக்கு தள்ளி வைத்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்