பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கம் செய்ய கோரிய வழக்கு …!பன்னீர் செல்வத்தின் கோரிக்கை நிராகரிப்பு ..!

Published by
Venu

பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கம் செய்ய கோரும்  வழக்கின் விசாரணையை நாளை ஒத்திவைக்க கோரியதை  உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது.
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் (செப்டம்பர் 25 ஆம் தேதி)சபாநாயகரின் உத்தரவு செல்லும் என்று தீர்ப்பு அளித்தார் 3வது நீதிபதி சத்யநாராயணன்.மேலும் அதேபோல் 18 எம்.எல்.ஏக்களின் மனுக்களை தள்ளுபடி செய்தார் நீதிபதி சத்தியநாராயணன்.
Image result for 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க
செப்டம்பர் 26 ஆம் தேதி 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க விவகாரத்தில் தமிழக சபாநாயகர் சார்பில் வழக்கறிஞர் பாலாஜி சீனிவாசன் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்தார்.
அதேபோல் தினகரன் அணி மேல்முறையீடு செய்யவில்லை,தேர்தலை சந்திக்க தயாராக உள்ளோம் என்றும் அறிவித்தது.
அதேபோல் ஜெயலலிதா அதிமுக பொதுச் செயலாளராக பதவி வகித்த நிலையில் அவர் மரணமடைந்ததை தொடர்ந்து, அக்கட்சியில் சசிகலாவின் ஆதிக்கம் தொடங்கியது. இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் பதவியிலிருந்து, விலகுமாறு நெருக்கடி வந்தது.
பின் ஓ.பன்னீர்செல்வம்  முதல்வர் பதவியை இழந்த நிலையில்  2017 பிப்ரவரி 8ம் தேதி, மெரினாவில் உள்ள ஜெயலலிதா சமாதி முன்பாக சென்று தியானத்தில் இருந்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் , தனது மனசாட்சி கேள்வி எழுப்பியதால்தான் ஜெயலலிதா நினைவிடத்திற்கு வந்ததாகவும், அவர் மறைவுக்குப் பிறகு நடைபெற்ற சம்பவங்கள் குறித்தும் பரபரப்பு தகவல்களைதெரிவித்தார்.
பின்னர் அதிமுகவில் சிலர் பன்னீர்செல்வம் தலைமையில் தனி அணியாக பிரிந்து சென்றனர்.பன்னீர்செல்வம்  அணி சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறையில் அடைக்கப்பட்டதால் எடப்பாடி பழனிச்சாமி அணியுடன் இணைந்து கொண்டது.தற்போது எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது.
ஆனால் பிரிந்து சென்ற சமயத்தில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம்  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சட்டசபையில் தனது அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தை கொண்டு வந்தார்.

அந்த நேரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான அணியில் இருந்த  ஓ.பன்னீர்செல்வம், மா.பா.பாண்டியராஜன், செம்மலை, ஆறுகுட்டி, சண்முகநாதன், மாணிக்கம், மனோகரன், மனோரஞ்சிதம், சரவணன், சின்னராஜ், ஆர்.நட்ராஜ் ஆகிய 11 எம்.எல்.ஏ.க்கள் அரசு தலைமை கொறடாவின் உத்தரவை மீறி நம்பிக்கை தீர்மானத்துக்கு எதிராக  ஓட்டு போட்டனர்.

இந்த விவகாரம் குறித்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம்,பன்னீர்செல்வம்  உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய முடியாது என்றும் சபாநாயகர் இதுகுறித்து எந்த உத்தரவையும் பிறப்பிக்காத நிலையில் தகுதிநீக்கம் செய்வது சரியாக இருக்காது என்றும் தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து திமுக சார்பில் திமுக கொறடா சக்கரபாணி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

 
இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணையை நாளை ஒத்திவைக்க பன்னீர்செல்வம்  தரப்பு  கோரியதை  உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது.
 

Published by
Venu

Recent Posts

மீந்து போன சாதத்தை வச்சு இப்படி கூட செய்யலாமா?.

சென்னை - சாதம் மிச்சமாயிடுச்சுனா இனிமே குப்பைல போடாதீங்க ..மீந்து போன சாதத்தை வைத்து அடை செய்வது எப்படி என…

22 mins ago

சச்சினை ஓவர்டேக் செய்த ரன் மெஷின்! விராட் கோலி செய்த வரலாற்று சாதனை!

சென்னை : விராட் கோலி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ரன்கள் எடுப்பதன் மூலம் பல சாதனைகளை முறியடித்து புதிய சாதனைகளை…

23 mins ago

“அரசியல் ஆர்வம் இல்லை”…துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!

சென்னை : தமிழக துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொருப்பேற்றிருக்கும் நிலையில், அவரின் வரலாற்றை தோண்டி எடுத்து சமூக வலைதளங்களில்…

35 mins ago

IND vs BAN : 2-வது டெஸ்டில் வெற்றி பெற முடியுமா? யுக்திகள் என்ன?

கான்பூர் : நடைபெற்று வரும் 2-வது டெஸ்ட் போட்டியில், 4-வது நாள் ஆட்டம் இன்று தொடங்கப்பட்டது. இதில் முதல் இன்னிங்ஸில்…

43 mins ago

திமுக அமைச்சரை பாராட்டிய அதிமுக முக்கிய புள்ளி.!

சென்னை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 4 புதிய அமைச்சர்கள் நேற்று பதவியேற்றுக் கொண்டனர். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர்…

51 mins ago

“அன்பு உடன்பிறப்புகளே இதை தவிர்க்க வேண்டும்”..துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்!

சென்னை : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று துணை முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக்கொண்டார். இதனையடுத்து, அவருக்குத் தொண்டர்கள், அரசியல் தலைவர்கள், சினிமாவை…

2 hours ago