தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய சீமான் மீது வழக்குப்பதிவு…!

Default Image

சீமான் மீது செங்கல்பட்டு நகர போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அனைத்து காட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது. இதனையடுத்து, செங்கல்பட்டு தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கி.சஞ்சீவி நாதனை ஆதரித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் நேற்று முன்தினம் இரவு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில், இரவு 10 மணிக்கு மேல் ஆகிவிட்டதால் போலீசார் அவரை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட அனுமதிக்காத நிலையில், சீமான் தொடர்ந்து பேச முயன்றுள்ளார். இதனால் போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்பகுதியில் பிரச்சாரத்திற்காக பயன்படுத்தப்பட்ட மின்விளக்குகள், ஒலிபெருக்கிகள் ஆகியவற்றிற்கு கொடுக்கப்பட்டிருந்த மின்இணைப்பு காவல்துறையினர் துண்டித்துள்ளனர். இதனையடுத்து, சீமான் மீது செங்கல்பட்டு நகர போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்