வேலுமணிக்கு எதிரான வழக்கு – அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

Default Image

முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிரான வழக்கு தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு.

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணிக்கு எதிரான வழக்கின் விசாரணை நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. மாநகராட்சி டெண்டர் முறைகேடு வழக்கு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனிடையே, எஸ்.பி. வேலுமணி அமைச்சராக இருந்தபோது பல்வேறு பணிகளுக்கு, டெண்டர் வழங்கியதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதை எதிர்த்து எஸ்.பி. வேலுமணி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்தார். அதில், தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக்கோரியும், லஞ்ச ஒழிப்புத்துறையின் ஆரம்ப கட்ட விசாரணையின் அறிக்கையை வழங்க உத்தரவிடுமாறும் கோரியிருந்தார். அதன்படி, எனவே, முதற்கட்ட விசாரணை அறிக்கையை வேலுமணிக்கு வழங்க வேண்டும் என உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த நிலையில், வேலுமணிக்கு எதிரான வழக்கின் விசாரணை நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்