நீட் பாதிப்பு குறித்த ஆய்வுக் குழுவை எதிர்த்த பாஜக நிர்வாகி கரு. நாகராஜன் தொடர்ந்த வழக்கில் இடையீட்டு மனு தாக்கல்.
தமிழகத்தில் நீட் தேர்வால் ஏழை மற்றும் கிராம புற மாணவர்கள் பாதிக்கப்படுவதையடுத்து, நீட் தேர்வின் பாதிப்பு குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்வதற்காக உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில், 9 பேர் அடங்கிய குழுவை ஜூன் 10-ம் தேதி அமைத்து, தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.
நீட் தேர்வுக்கு பாதிப்பை ஆராய அமைக்கப்பட்ட குழுவை எதிர்த்து பாஜக நிர்வாகி கரு.நாகராஜன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில், இந்த வழக்கில் தங்களையும் இணைக்கக்கோரி திமுக, மதிமுக, சிபிஎம் மற்றும் ஆசிரியர் பிரின்ஸ் கஜேந்திரபாபு ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
நீட்தேர்வு பாதிப்பு பற்றி ஏ.கே.ராஜன் குழு அறிக்கை தாக்கல் செய்யவில்லை. குழு அறிக்கை தரும் போது அதன் மீது தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்பது தெரியாமல் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அறிக்கை அளிக்காத போது தமிழக அரசு முடிவு எடுக்காத நிலையில் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என திமுக கூட்டணி கட்சியினர் தெரிவித்துள்ளனர். இந்த மனு மீதான விசாரணை வரும் திங்கட்கிழமை தலைமை நீதிபதி முன் வரும் என தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…
சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…
ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக செயல்பட்டு வந்த மணிமேகலை நிகழ்ச்சியில் பிரியங்கா தன்னுடைய வேலையை செய்யவிடாமல் அவருடைய…
ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி பிரசாதமாக அளிக்கப்படும் லட்டு தயாரிக்க, பயன்படுத்தப்படும் நெய்யில், மீன் எண்ணெய்,…