நீட் ஆய்வுக்குழுவுக்கு எதிரான வழக்கு- இடையீட்டு மனுத்தாக்கல்..!

Default Image

நீட் பாதிப்பு குறித்த ஆய்வுக் குழுவை எதிர்த்த பாஜக நிர்வாகி கரு. நாகராஜன் தொடர்ந்த வழக்கில் இடையீட்டு மனு தாக்கல்.

தமிழகத்தில் நீட் தேர்வால் ஏழை மற்றும் கிராம புற மாணவர்கள் பாதிக்கப்படுவதையடுத்து, நீட் தேர்வின் பாதிப்பு குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்வதற்காக உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில், 9 பேர் அடங்கிய குழுவை ஜூன் 10-ம் தேதி அமைத்து, தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.

நீட் தேர்வுக்கு பாதிப்பை ஆராய அமைக்கப்பட்ட குழுவை எதிர்த்து பாஜக நிர்வாகி  கரு.நாகராஜன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில், இந்த வழக்கில் தங்களையும் இணைக்கக்கோரி திமுக, மதிமுக, சிபிஎம் மற்றும் ஆசிரியர் பிரின்ஸ் கஜேந்திரபாபு ஆகியோர்  உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

நீட்தேர்வு பாதிப்பு பற்றி ஏ.கே.ராஜன் குழு அறிக்கை தாக்கல் செய்யவில்லை. குழு அறிக்கை தரும் போது அதன் மீது தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்பது தெரியாமல் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அறிக்கை அளிக்காத போது தமிழக அரசு முடிவு எடுக்காத நிலையில் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என திமுக கூட்டணி கட்சியினர் தெரிவித்துள்ளனர். இந்த மனு மீதான விசாரணை வரும் திங்கட்கிழமை தலைமை நீதிபதி முன் வரும் என தகவல் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
mk stalin
dominicanRepublic
Good Bad Ugly Review
PMK Leader Dr Ramadoss - Anbumani Ramadoss
Actor Rajinikanth - Actor Ajithkumar
US China Tariff War