அமைச்சர் பாண்டியராஜன் மீதான  வழக்கு – விசாரணைக்கு தடை

Default Image
  • அமைச்சர் பாண்டியராஜன்  மீது புகார் அளிக்கப்பட்டது. 
  • பாண்டியராஜன் மீதான  வழக்கு விசாரணைக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜெயலலிதா அதிமுக பொதுச் செயலாளராக பதவி வகித்த நிலையில் அவர் மரணமடைந்ததை தொடர்ந்து, அக்கட்சியில் முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் பதவியிலிருந்து விலகினார்.மேலும் இவரது தலைமையில் ஒரு அணி இருந்தது.பின் ஓ.பன்னீர்செல்வம்  முதல்வர் பதவியை இழந்த நிலையில் அதிமுகவில் இரு அணிகள் உருவாகியது.பன்னீர் செல்வம் தலைமையில் ஒரு அணி ,எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணி என இரண்டு அணிகள் பிரிந்தது.தற்போது தமிழகத்தில் முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது.பிரிந்து சென்ற பன்னீர்செல்வமும் அவரது அணியும் பின்னர் பழனிசாமியுடன் இணைந்தனர்.பன்னீர் செல்வம் துணை முதல்வராக பதவி வகித்து வருகின்றார்.

பன்னீர் செல்வம் பிரிந்த சமயத்தில் தான் அவரது அணியில் இருந்தவர் மாஃபா பாண்டியராஜன்.அப்பொழுது ஆர் .கே.நகர் இடைத்தேர்தல் நடைபெற்றது.அந்த சமயத்தில் சவப்பெட்டியில் தேசியக்கொடியை வைத்து பிரச்சாரம் மேற்கொண்டார் பாண்டியராஜன்.தேர்தல் அதிகாரி அளித்த புகாரின் பெயரில் பாண்டியராஜன் தமிழ்செல்வி,குப்பன் ஆகியோர் மீது ஆர்.கே.நகர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.இந்த வழக்கினை எல்.எல்.ஏ., எம்.பி.க்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வந்தது.எனவே  தற்போது அமைச்சராக உள்ள பாண்டியராஜன் தரப்பில் வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில்  வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கு தொடர்பான விசாரணையில், பாண்டியராஜன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பாண்டியராஜன் பிரச்சாரத்தில் கலந்து கொண்டாரே தவிர, பிரசாரத்திற்கு ஏற்பாடு செய்யவில்லை என்று விளக்கம் அளித்தார். இதையடுத்து, சிறப்பு நீதிமன்ற விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்