கடந்த 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வேளச்சேரியில் நடந்த திமுக பொதுக் கூட்டத்தில் அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கலந்து கொண்டு பேசினார்.அப்போது,ஆட்சியில் இருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறு கருத்து வெளியிட்டதாக ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக அவதூறு வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு சென்னை எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்த நிலையில்,
தனக்கு எதிரான அவதூறு வழக்கை ரத்து செய்யக் கோரி,ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.
இதனையடுத்து,வழக்கு விசாரணையில் ஒரு முதல்வர் செய்ய வேண்டிய மக்கள் பணி குறித்தே பேசியதாகவும், ஜனநாயக ரீதியாக முதல்வரை விமர்சிக்க உரிமை உள்ளதாகவும், தனிப்பட்ட ரீதியில் விமர்சிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்திருந்தார்.இதனைத் தொடர்ந்து,இந்த வழக்கு தொடர்பாக ஆர்.எஸ்.பாரதி நேரில் ஆஜராவதில் இருந்து சென்னை உயர்நீதிமன்றம் விலக்கு அளித்தது.
இந்நிலையில்,இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில்,திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மீது போடப்பட்ட அவதூறு வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
லண்டன் : 1000 திரைப்படங்களுக்கு மேல் இசையமைத்து இசைஞானியாக நம்மில் உயர்ந்து நிற்கும் இளையராஜா தற்போது தனது நீண்ட வருட…
சென்னை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பிக்கள் கலந்துகொள்ளும் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. நாளை…
குஜராத் : மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி குஜராத்திற்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். தனது…
துபாய் : துபாயில் நாளை நடைபெறவுள்ள ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதவுள்ளன. இந்தியா மற்றும்…
சென்னை : தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தவெக சார்பில் மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கு விழிப்புணர்வு பேரணி மற்றும் தமிழக…
சென்னை : பெண்களுக்கு முழுமையான பாதுகாப்பை ஏற்படுத்தித் தர வேண்டும் எனத் தமிழ்நாடு அரசை வலியுறுத்தி, தவெக சார்பில் தமிழ்நாடு…