தேர்வறை கண்காணிப்பாளர் தேனி மாவட்டம் கம்பத்தில் பிளஸ்2 தேர்வெழுதிய மாணவிகளுக்கு, பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது.
தேனி மாவட்டம் கம்பத்தில் உள்ள சக்தி விநாயகர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 மாணவ, மாணவிகள் கணிதத் தேர்வெழுதிக் கொண்டிருந்தனர். இதில் ஒரு அறையில் இராயப்பன்பட்டியைச் சேர்ந்த அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர் ஜெயராஜ், கண்காணிப்பாளராக இருந்தார்.
தேர்வின் போது மது போதையில் இருந்த ஜெயராஜ் மாணவிகளை தனது செல்போனில் புகைப்படம் எடுத்து சில்மிஷத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்படுகிறது. தேர்வெழுதிக் கொண்டிருந்ததால் நேரம் கருதி புகார் அளிக்காமலிருந்த மாணவிகள் தேர்வு முடிந்ததும் பெற்றோரிடம் இது குறித்து தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து மாணவிகளின் பெற்றோர் பள்ளியில் திரண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து ஆசிரியர் ஜெயராஜிடம் தலைமை கண்காணிப்பாளர் சோதனை நடத்தியதில் அவரது செல்போனில் புகைப்படங்கள் கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது. தனியார் பள்ளி நிர்வாகத்தினர் தகவல் அளித்தைத் தொடர்ந்து, கல்வித்துறை மண்டல இணை இயக்குநர் தமிழ்ச்செல்வன், மாவட்ட கல்வி அதிகாரி ராஜராஜேஸ்வரி ஆகியோர் பள்ளிக்கு வந்து ஆசிரியர் ஜெயராஜிடம் விசாரணை நடத்தினர். பொதுத்தேர்வு எழுதிய மாணவிகளுக்கு தொந்தரவு அளித்ததால் மறுதேர்வு நடத்துமாறு ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்தனர்.
ஆசிரியர் ஜெயராஜ் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து பள்ளி தரப்பிலோ பெற்றோர் தரப்பிலோ புகார் ஏதும் அளிக்கப்படவில்லை. எனினும் பாதுகாப்பு கருதி ஆசிரியர் ஜெயராஜை கம்பம் காவல்துறையினர் அழைத்துச் சென்றனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…