ஆபத்தான பொருட்களை எடுத்து சென்றால் ரயில்வே சட்டப்பிரிவு 154, 164, 165ன் படி குற்றம் – ரயில்வே

Published by
பாலா கலியமூர்த்தி

மதுரையில் இன்று காலை சுற்றுலா ரயிலில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லக்னோவில் இருந்து தென்னிந்தியாவில் ஆன்மிக பயணம் செய்வதற்காக 60-க்கும் மேற்பட்டோர் அந்த ரயிலில் ஒரு பெட்டியில் பயணித்துள்ளனர். இந்த சமயத்தில் மதுரை ரயில் நிலையத்தில் இருந்து 1 கிமீ தூரத்தில் மற்றொரு ரயிலில் இணைப்பதற்காக நிறுத்தப்பட்டிருந்த ரயில் பெட்டியில் தீவைத்து ஏற்பட்டுள்ளது.

இந்த தீவிபத்தில் சிக்கி இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ரயிலில் இருந்த சுற்றுலா பயணிகள் சிலிண்டர் வைத்து சமையல் செய்ததால் தான் தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையின் தகவல்கள் தெரிவிக்கின்றன. அங்கு மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் அமைச்சர் மூர்த்தி, மாவட்ட ஆட்சியர், தடவியல் நிபுணர்கள் உள்ளிட்டோர் ஆய்வு  வருகின்றனர்.

மதுரை ரயில் பெட்டிகளில் தீ விபத்து ஏற்பட்டதற்கு சட்ட விரோதமாக கொண்டு செல்லப்பட்ட சிலிண்டரே காரணம். சட்டவிரோத சிலிண்டரில் பயணிகள் சமைக்க முயன்றபோது தீ விபத்து ஏற்பட்டதாக தெற்கு ரயில்வே அறிக்கை வெளியிட்டது. அதுமட்டுமில்லாமல், மதுரையில் தீ விபத்து நடந்த சுற்றுலா ரயிலில் சிலிண்டர், விறகு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ரயில்களில் ஆபத்தான பொருட்களை எடுத்து செல்வது தண்டனைக்குரிய குற்றம் எனவும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. ரயில்வே துறைக்கு தீப்பிடிக்கும் பொருட்களை எடுத்து செல்லமாட்டோம் என அளித்த உறுதிமொழியை சுற்றுலா பயணிகள் மீறியுள்ளனர். சட்டவிரோதமாக பயன்படுத்திய சிலிண்டரால் தான் விபத்து ஏற்பட்டுள்ளது. 3 சமையல் சிலிண்டர்கள் வைத்திருந்ததால் மளமளவென தீ பரவியுள்ளது.

தடை இருக்கும் பட்சத்தில் தடையை மீறி சிலிண்டரை எடுத்து சென்றுள்ளனர். எரியும் அல்லது வெடிக்கும் பொருட்களை ரயிலில் எடுத்து செல்வது ரயில்வே சட்டப்பிரிவு 154, 164, 165ன் படி குற்றம் என்றும் விதிமீறல் நடந்துள்ளது எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. எனவே, எளிதில் தீப்பற்றக்கூடிய, வெடிக்க கூடிய பொருட்கள் இல்லாமல் ரயிலில் பயணிக்க வேண்டும் எனவும் தெற்கு ரயில்வே அறிவுறுத்தியுள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

இனிமே மொழி தெரியலைனு கவலைவேண்டாம்…கூகுள் மீட்டில் வந்த சூப்பர் அப்டேட்!இனிமே மொழி தெரியலைனு கவலைவேண்டாம்…கூகுள் மீட்டில் வந்த சூப்பர் அப்டேட்!

இனிமே மொழி தெரியலைனு கவலைவேண்டாம்…கூகுள் மீட்டில் வந்த சூப்பர் அப்டேட்!

கூகுள் நிறுவனமானது I/O 2025 மாநாட்டில் கூகுள் மீட்டில் (Google Meet)-இல் Real-Time Speech Translation என்ற புதிய அம்சத்தை…

3 hours ago
“இனப்படுகொலை” நடக்கிறது…தென்னாப்பிரிக்க அதிபரை அதிர வைத்த டிரம்ப்!“இனப்படுகொலை” நடக்கிறது…தென்னாப்பிரிக்க அதிபரை அதிர வைத்த டிரம்ப்!

“இனப்படுகொலை” நடக்கிறது…தென்னாப்பிரிக்க அதிபரை அதிர வைத்த டிரம்ப்!

வாஷிங்டன் : அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசாவை 2025 மே…

6 hours ago
நாடு முழுவதும் புனரமைக்கப்பட்ட 103 ரயில் நிலையங்கள்… திறந்து வைக்கும் பிரதமர் மோடி!நாடு முழுவதும் புனரமைக்கப்பட்ட 103 ரயில் நிலையங்கள்… திறந்து வைக்கும் பிரதமர் மோடி!

நாடு முழுவதும் புனரமைக்கப்பட்ட 103 ரயில் நிலையங்கள்… திறந்து வைக்கும் பிரதமர் மோடி!

சென்னை : பிரதமர் நரேந்திர மோடி இன்று (மே 22, 2025) ராஜஸ்தான் மாநிலம் பிகானரில் இருந்து காணொலி வாயிலாக…

6 hours ago

தஞ்சை : நேருக்கு நேர் மோதி கோர விபத்து… பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

தஞ்சாவூர் : மாவட்டம், செங்கிப்பட்டி பகுதியில் உள்ள நாகப்பட்டினம்-திருச்சி நெடுஞ்சாலையில் மே 21, 2025 அன்று இரவு 8 மணியளவில்…

7 hours ago

என்கவுன்ட்டரில் கொல்லப்பட்ட மாவோயிஸ்ட் தலைவர் பசவராஜு! நடந்தது என்ன?

சத்தீஸ்கர்: மாநிலத்தில் மாவோயிஸ்ட் இயக்கத்தின் முக்கிய தலைவர் நம்பல கேசவ் ராவ் என்ற பசவராஜு உட்பட 27 மாவோயிஸ்டுகள் பாதுகாப்பு…

8 hours ago

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருக்கா? வானிலை மையம் கொடுத்த தகவல்!

சென்னை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வரும் நிலையில், அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான…

8 hours ago