மாணவர்கள் எண்ணிகை குறைவாக உள்ள பள்ளி விடுதிகளை கல்லூரி விடுதிகளாக மாற்ற வேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தல்.
ஆதிதிராவிடர், பழங்குடியின மக்களுக்கான நல திட்ட உதவிகள், மேம்பாட்டு பணிகளை தாமதமின்றி நிறைவேற்ற வேண்டும் என முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். ஆதிதிராவிடர், பழங்குடியின நலத்திட்டங்கள் தொடர்பான ஆய்வுக்கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தினார்.
மயான வசதி மற்றும் மயான வழிப்பாதை அமைக்கும் பணிகளை விரைந்து செயல்படுத்த வேண்டும். வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதிஉதவி, வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகையை தாமதமின்றி வழங்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
குடியிருப்பு, ஓய்வூதியம் கோரி வழங்கப்படும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து தீர்வு காண வேண்டும். ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலப்பள்ளி, கல்லூரி விடுதிகளை சிறப்பாக பராமரிக்க வேண்டும் என்றும் மாணவர்கள் எண்ணிகை குறைவாக உள்ள பள்ளி விடுதிகளை கல்லூரி விடுதிகளாக மாற்ற வேண்டும் எனவும் கூறினார்.
மேலும், இலவச வீட்டு மனை பட்டா வழங்குவது குறித்து துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பழங்குடியினர் சாதிச்சான்றிதழ் மெய்தன்மை சரிபார்ப்பு பணியை நிலுவையின்றி முடிக்க வேண்டும் எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
துபாய் : டி20 மகளிர் கோப்பைத் தொடரில் இன்று நடைபெற்ற 8-வது போட்டி துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சென்னை : பிக் பாஸ் தமிழ் சீசன் நிகழ்ச்சி எப்போது தொடங்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், தற்போது…
குவாலியர் : வங்கதேச அணி, இந்தியாவில் மேற்கொண்டு வரும் சுற்று பயணத்தில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 2-0 என…
துபாய் : நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரின் இன்றைய 7-வது போட்டியில் இந்திய மகளிர் அணியும், பாகிஸ்தான் மகளிர்…
ஷார்ஜா : நடைபெற்று வரும் டி20 உலககோப்பைத் தொடரின் இன்றைய போட்டியில் வங்கதேச மகளிர் அணியும், இங்கிலாந்து மகளிர் அணியும்…
ஷார்ஜா : நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரின் 5-வது போட்டியான இன்று ஆஸ்திரேலிய மகளிர் அணியும், இலங்கை…