கவனக்குறைவாக பயன்படுத்தப்பட்ட வாட்டர் ஹீட்டர் – ஒன்றை வயது குழந்தை பலி!

Published by
Rebekal
திருப்பத்தூரில் கவனக்குறைவாக பயன்படுத்தப்பட்ட வாட்டர் ஹீட்டரால் பரிதாபமாக உயிரிழந்த ஒன்றரை வயது குழந்தை.
ஆம்பூரை சேர்ந்த புருஷோத்தமன் பவித்ரா தம்பதிகளின் ஒன்றரை வயது குழந்தை தான் அனன்யா. பவித்ரா  தனது தாய் வீட்டுக்கு சென்று குழந்தையுடன் இரண்டு நாள் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் தங்கியிருந்த நிலையில், குளிப்பதற்காக பிளாஸ்டிக் குடத்தில் தண்ணீர் நிரப்பி வாட்டர் ஹீட்டர் வைத்து சென்றுள்ளார் பவித்ரா. அங்கு விளையாடிக் கொண்டிருந்த குழந்தை விளையாட்டாக நினைத்து தண்ணீரில் கை வைத்த போது மின்சாரம் தாக்கி மயங்கி விழுந்துள்ளார்.
குடம் கீழே விழுந்த சத்தம் கேட்டு ஓடி வந்த பவித்ரா குழந்தை மயங்கி கிடந்தது கண்டு கூச்சலிட்டதையடுத்து அக்கம்பக்கத்தினர் குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் பாதி வழியிலேயே குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவர் கூறியுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகள் இருக்கக்கூடிய வீட்டில் வாட்டர் ஹீட்டர் மற்றும் மின்சாதன பொருட்களை மிகவும் கவனமாக குழந்தைகள் தொட முடியாத இடத்தில் வைத்து பயன்படுத்த வேண்டியது பெற்றோர்களின் கடமை.
Published by
Rebekal

Recent Posts

டெல்லி அரசின் பட்ஜெட் ரூ.1 லட்சம் கோடி..! முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட ரேகா குப்தா!

டெல்லி : மாநிலத்தில் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மார்ச் 25 அன்று முதலமைச்சரும் நிதியமைச்சருமான ரேகா குப்தா நாடாளுமன்றத்தில் தாக்கல்…

6 minutes ago

தமிழ்நாட்டில் விரைவில் உள்ளாட்சி இடைத்தேர்தல்! வெளியான முக்கிய அப்டேட்!

சென்னை : தமிழ்நாட்டில் காலியாக உள்ள நகராட்சி மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்பு உறுப்பினர்கள் பதவிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தமிழ்நாடு…

53 minutes ago

எந்த காலத்திலும் மும்மொழிக் கொள்கையை எற்றுக் கொள்ள மாட்டோம் – முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு!

சென்னை : மும்மொழி கொள்கை விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ள நிலையில், இன்னும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தை…

2 hours ago

“இபிஎஸ்-க்கு என் அன்பான வேண்டுகோள்!” முதலமைச்சரின் ‘முக்கிய’ கோரிக்கை!

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த விவாதத்தின் போது உறுப்பினர்கள்…

2 hours ago

ஆனது டக் அவுட்…அடிச்சது ரூ.1.93 கோடி! சம்பளத்தை அள்ளிய ரிஷப் பண்ட்!

டெல்லி : 2016-ஆம் ஆண்டிலிருந்து 2024 வரை டெல்லி அணிக்காக விளையாடி வந்த ரிஷப் பண்டை இந்த முறை 2025…

3 hours ago

முடிச்சி விட்டீங்க போங்க.., சில நிமிடங்களில் விற்று தீர்ந்த CSK – RCB டிக்கெட்கள்!

சென்னை : ஐபிஎல் திருவிழா ஆரம்பித்து தினம் தினம் கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்து வருகிறது. வரும் சென்னை மற்றும்…

3 hours ago