கார் மோதி கர்ப்பிணி பலி – கணவரை பார்த்துவிட்டு வீட்டுக்கு திரும்பிய போது விபரீதம்!

Published by
Rebekal

கணவரை பார்த்துவிட்டு வீட்டுக்கு திரும்பிய போது கார் மோதி 4 மாத கர்ப்பிணி பலியாகியுள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னையிலுள்ள வில்லிவாக்கம் ரங்கதாஸ் காலனியை சேர்ந்தவர்கள் தான் அசாருதீன் – கௌஷிவி தம்பதிகள். நான்கு மாத கர்ப்பிணியான கௌஷிவிக்கு ஏற்கனவே ஒன்றரை வயதில் மகன் ஒருவன் உள்ளான். துணிக்கடை ஒன்றில் அசாருதீன் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கௌஷிவி ஸ்கேன் எடுத்துவிட்டு, அந்த ரிப்போர்ட்டை வேலை பார்த்து கொண்டிருக்கும் தனது கணவரிடம் கட்டுவதற்காக துணிக்கடைக்கு சென்றுள்ளார்.

அதன் பின் சாலையில் நடந்து வீட்டுக்கு திரும்பி வந்துகொண்டிருந்த கௌஷிவி மீது வேகமாக வந்த கார் மோதியுள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே கர்ப்பிணி கௌஷிவி துடிதுடித்து உயிரிழந்துள்ளார். விபத்து ஏற்படுத்திய காரில் இருந்து இறங்கிய பெண் ஆட்டோவில் ஏறி தப்பி சென்றுள்ளார், அந்த காரும் வருமான வரித்துறையினருக்கு சொந்தமானது என கூறப்படுகிறது. தற்பொழுது கௌஷிவி உடலை போலீசார் கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளதுடன், தப்பியோடிய காரின் உரிமையாளர்களையும் தேடி வருகின்றனர்.

Published by
Rebekal

Recent Posts

வசூல் வேட்டையில் ‘GOAT’ ! 13 நாட்களில் இத்தனை கோடியா?

வசூல் வேட்டையில் ‘GOAT’ ! 13 நாட்களில் இத்தனை கோடியா?

சென்னை :வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து கடந்த செப்-5ம் தேதி மிகுந்த எதிர்பார்ப்புடன் திரையருங்குகளில் வெளியான GOAT திரைப்படம்…

12 hours ago

ஜானி மாஸ்டர் மீது பாய்ந்தது போக்சோ வழக்கு.! விரைவில் கைது?

ஹைதராபாத் : முன்னணி நடன இயக்குநர் ஜானி மீது 21 வயது இளம் பெண் ஐதராபாத் போலீசில் பாலியல் பலாத்கார புகார்…

12 hours ago

அனல் பறக்கும் பிரியங்கா பிரச்சனை…மணிமேகலை போட்ட கெத்து பதிவு?

சென்னை : மணிமேகலை மற்றும் பிரியங்கா ஆகியோருக்கு இடையே  நடந்த ஆங்கரிங் பிரச்சனை பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில்,…

13 hours ago

தனுஷ் விவகாரம்: ஃபெப்சி செயலுக்கு நடிகர் சங்கம் அழுத்தமான கண்டனம்.!

சென்னை : தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் என்கிற (ஃபெப்சி) அமைப்பின் சார்பில், அதன் தலைவர் ஆர்.கே.செல்வமணி நேற்று நிருபர்களுக்கு…

13 hours ago

‘பத்து நிமிஷத்துல பஞ்சு போன்ற அப்பம்’: ட்ரை பண்ணி பாருங்க!

சென்னை- வீட்டில் இருக்கும் கொஞ்ச பொருட்களை வைத்து சட்டென ஒரு ஸ்நாக்ஸ் ரெடி பண்ணனுமா ?அப்போ இந்த பஞ்சு போன்ற…

13 hours ago

ஐபிஎல் 2025 : “பஞ்சாப் அணிக்கு அடித்த ஜாக்பாட்”! பயிற்சியாளராக இணைந்தார் ரிக்கி பாண்டிங்!

சென்னை : ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளராக விலகிய பிறகு தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமைப்…

14 hours ago