முதன்முதலில் அழகு தமிழில் அறிவிப்பு வெளியிட்ட கேப்டன்.
இந்தியாவில் தற்போது விமானங்களில் அறிவிப்புகள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் தான் வெளியிடப்பட்டு வருகிறது. ஆனால், தமிழகத்தில் பறக்கும் விமானத்தில் தமிழில் அறிவிப்பு செய்யவேண்டும் என்று கோரிக்கை நீண்ட நாள்களாக இருந்துவருகிற நிலையில், வடசென்னையைச் சேர்ந்த பிரிய விக்னேஷ் என்பவர், இண்டிகோ விமானத்தில் கேப்டனாக இருக்கிறார்.
இவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சென்னையிலிருந்து மதுரை சென்ற விமானத்தில், தமிழில் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிற நிலையில், அந்த வீடியோவில் பேசும் அவர், ‘திருச்சி நகரத்தில் 16,000 அடி உயரத்தில் நாம் பறந்துகொண்டிருக்கிறோம்.
இன்னும் பத்து நிமிடத்தில் காவேரி ஆறு, காவேரி, கொள்ளிடம் என பிரியும் இடத்தைக் காண முடியும். இந்த இரண்டு ஆறுகளும் பிரியும் இடத்திலுள்ள இடத்துக்கு ஸ்ரீரங்கம் என்று பெயர். நீங்கள், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலைக் காண காணலாம்’ என்று அழகுத் தமிழில் பேசியுள்ளார். இவரது இந்த செயலுக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…