இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேற்று இரவு பதிவு ஒன்றை பதிவிட்டார். அந்த பதிவு யாரும் எதிர்பாராத வகையில் இருந்தது.ஏனென்றால் தோனி சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக சென்னையில் இருந்தபடி அறிவித்தார்.
அவர் தன் பதிவில் தன் மீது அன்பு காட்டி ஆதரவு அளித்த ரசிகர்களுக்கு நன்றி என கூறியிருந்தார். தோனியின் ஓய்வு அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தோனியின் ஓய்வு குறித்து பல அரசியல் தலைவர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி உடன் தோனி இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, மகேந்திர சிங் தோனி நெருக்கடியான தருணங்களில் தளராமல் வெற்றியை நோக்கி வழிநடத்திய கேப்டன் கூல், கிரிக்கெட் வீரராகவும் இந்திய அணியின் கேப்டனாகவும் அவரது பங்களிப்பு இன்றியமையாதது, என்று பதிவிட்டுள்ளார்.
கடந்த 2014-ம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற தோனி, தற்போது சர்வதேச ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளிலும் ஓய்வை அறிவித்துள்ளார்.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…