அனுமதியின்றி நடைபெறும் வேல் யாத்திரையில் தலையிடக்கூடாது என தமிழக அரசு மற்றும் காவல்துறைக்கு உத்தரவிட முடியாது என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பாஜாகவினர் சார்பில் நடைபெறவிருந்த வேல் யாத்திரை தமிழகத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் தடையை மீறி சில இடங்களில் வேல் யாத்திரை நடத்தக்கூடிய பாஜகவினரை காவல்துறையினர் உடனடியாக கைது செய்து வருகின்றனர். இந்நிலையில் மத நிகழ்ச்சிகளில் 100 பேர் வரை கலந்துகொள்ளலாம் என்ற அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என பாஜகவினர் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பாஜகவினரை பார்த்து சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளனர். அதாவது ஆயுதமாகிய வேல் தடை செய்யப்பட்டுள்ள நிலையில் வேல் யாத்திரை எவ்வாறு நடத்த முடியும்? அனுமதி இன்னும் கொடுக்காத நிலையில் பாஜாகவினர் வேல் யாத்திரை நடத்தியது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும், வேல் யாத்திரை விவகாரத்தில் தமிழக அரசு மற்றும் காவல்துறை தலையிடக்கூடாது என உத்தரவிட முடியாது எனவும் தெரிவித்து, வழக்கை வருகின்ற டிசம்பர் 2 ஆம் தேதி வரை தள்ளி வைத்து உத்தரவிட்டுள்ளனர்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…