மத்திய அரசை ஒன்றிய அரசு என அழைப்பதற்கு தடைவிதிக்க உத்தரவிட கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
உயர்நீதிமன்ற மதுரை கிளையில் திண்டுக்கல்லை சார்ந்த ராமசாமி என்பவர் பொதுநல வழக்கை தாக்கல் செய்து இருந்தார். அதில், சமீபத்தில் தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக பெருபான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. திமுக ஆட்சி அமைத்த பின்னர், தமிழக முதல்வர் மற்றும் அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள் மத்திய அரசை ஒன்றிய அரசு என்று கூறி வருகிறார்கள்.
இந்திய அரசை இந்தியா அரசு அல்லது பாரத் அரசு என்று தான் கூறவேண்டும். இவர்கள் கூறுவது போல ஒன்றிய அரசு என்று குறிப்பிடுவது இந்திய இறையாண்மைக்கு எதிரானது, இதனால் மத்திய அரசை ஒன்றிய அரசு என அழைப்பதற்கு தடைவிதிக்க வேண்டும். மேலும் இந்த வழக்கு முடியும் வரை இந்தியா அரசு அல்லது பாரத் அரசு என்று தான் குறிப்பிட உத்தரவிட வேண்டும் என தெரிவித்து இருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி அடங்கிய அமர்வு, தமிழக முதலமைச்சரோ, அமைச்சர்களே இப்படி தான் பேசவேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க முடியாது. மத்திய அரசை ஒன்றிய அரசு என அழைப்பதற்கு தடைவிதிக்க உத்தரவிட முடியாது. அது முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களின் தனிப்பட்ட உரிமை என நீதிபதிகள் தெரிவித்தனர்.
சென்னை : இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மாவட்ட…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று அதிமுக மாவட்ட செயலாளர் ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில்…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…
டெல்லி : கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படமான பொன்னியின் செல்வன் 2 (PS2) இல் இடம்பெற்ற…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறை தொடர்பான மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது.…
உதகை : ஊட்டி ராஜ்பவன் மாளிகையில் இன்று (ஏப்.25) காலை துணைவேந்தர்கள் மாநாடு தொடங்கியது. மாநாட்டை குடியரசு துணைத் தலைவர்…