சென்னை ஆதம் பாக்கத்தில் உள்ள அம்பேத்கர் நகர் 3-வது தெருவில் வசித்து வருபவர் புஷ்வல்லி (37) இவருக்கு 2 மகன் ,மகள் உள்ளனர்.இரண்டு மகன்களில் ஒருவர் பவுல்ராஜ்(20). அம்பேத்கர் நகரில் கஞ்சா மற்றும் போதை பொருள்கள் விற்பதாக காவல் நிலையத்தில் பவுல்ராஜ் பல முறை புகார் கொடுத்து உள்ளார்.
இதனால் கோபமடைந்த போதை பொருள்கள் விற்பனை செய்யும் தலைவன் விக்கி (23) பவுல்ராஜை கொலை செய்ய முடிவு செய்தார்.அதன்படி நேற்று பெண்கள் உட்பட 10 பேர்கொண்ட கும்பல் பவுல்ராஜ் வீட்டிற்கு கத்தியுடன் சென்றனர்.வீட்டில் இருந்த பவுல்ராஜ் தங்கை ,தம்பி இருவரின் முகத்தில் மிளகாய்ப்பொடியை வீசி கத்தியால் தாக்கி உள்ளனர்.
வெட்டுப்பட்ட இருவரும் மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வருகின்றனர்.வீட்டில் பவுல்ராஜ் இருந்திருந்தால் அவரை கொலை செய்து இருப்பார்கள் என கூறப்படுகிறது.மேலும் இந்த சம்பவம் குறித்து அப்பகுதிமக்கள் கூறுகையில் , பவுல்ராஜ் புகார் கொடுத்தது தொடர்பாக போலீசார் நடவடிக்கை எடுத்து இருந்தால் இந்த சம்பவம் நடந்து இருக்காது என கூறுகின்றனர்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…