தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது.
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது. கடந்த 15ம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல் இன்று மாலை 5 மணியுடன் நிறைவடைந்து உள்ளது. மனு தாக்கல் தொடங்கிய முதல் 6 நாட்களில் 64,299 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இதனைத்தொடர்ந்து வேட்புமனுக்கள் மீதான பரிசீலினை நாளை நடைபெற உள்ளது. வேட்புமனுக்களை திரும்ப பெற செப். 25ம் தேதி கடைசி நாள். அக். 6 மற்றும் 9ம் தேதிகளில் இரண்டு கட்டமாக ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
மேலும், உள்ளாட்சி பதவிகளுக்காக சுமார் ஒரு லட்சத்துக்கும் மேல் வேட்புமனு தாக்கலாகி இருக்கும் என்று கூறப்படுகிறது. அக்டோபர் 12-ஆம் தேதி ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…