இன்றுடன் முடியும் வேட்புமனு தாக்கல் – புதிய வங்கி கணக்கு தொடங்க திண்டாடும் வேட்பாளர்கள்!

Published by
Castro Murugan

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பதால், புதிய வங்கி கணக்குகளை தொடங்க வேட்பாளர்கள் திண்டாட்டம்.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுக்க கடந்த 28-ஆம் தேதியில் இருந்து பெறப்பட்டு வருகிறது. வேட்புமனு தாக்கல் இன்றுடன் முடிவடைய உள்ளது. இதனால் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்களை வேகமாக தாக்கல் செய்து வருகின்றனர். இந்த நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வேட்பு மனுவோடு புதிய வங்கி கணக்கிற்கான பாஸ்புக் கேட்கப்படுவதால் வேட்பாளர்கள் சிரமத்துக்கு உள்ளாகி வருகிறார்கள்.

வேட்புமனு தாக்கல் செய்ய இன்று இறுதி நாள் என்பதால், வங்கி கணக்கு துவங்க அரை நாள் செலவிட வேண்டிய கட்டாயத்தில் வேட்பாளர்கள் உள்ளனர். வேட்புமனு தாக்கல் செய்ய வரும் போது தங்கள் மனுவில் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் குறித்த விவரம், மனைவி பெயரில் உள்ள சொத்துக்கள் குறித்த விவரங்கள் உள்ளட்டவை தெரிவிக்க வேண்டும்.

மேலும், ஆதார், பான்கார்டு ஜெராக்ஸ், வாக்காளர் அடையாள அட்டை, 5 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, 5 ஸ்டாம் சைஸ் போட்டோ ஆகியவற்றை சமர்ப்பித்து வருகின்றனர். இதே நேரத்தில் வேட்பாளர் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் புதிய கணக்கு தொடங்கி அதற்கான பாஸ்புக்கை சமர்ப்பிக்க தேர்தல் ஆணையத்தால் கேட்டு கொள்ளப்படுகிறது.

இதனால் வேட்பாளர்கள் கடைசி நநேரத்தில் வங்கியில் காத்திருந்து வங்கி கணக்கு தொடங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். சிலர் புதிய வங்கி பாஸ்புக்கை மட்டும் மறுநாள் சமர்ப்பிக்கிறேன் எனக்கூறி வருகின்றனர். இதுபோன்று நெல்லை உள்ளிய சில மாநகராட்சியில் பல வேட்பாளர்கள் புதிய வாங்கி கணக்கு தொடங்க திண்டாடி வருகின்றனர்.

இதுதொடர்பாக அதிகாரிகளில் கூறுகையில், மாநகராட்சி தேர்தலை பொறுத்தளவில் வேட்பாளர்கள் ரூ.85 ஆயிரம் மட்டுமே தேர்தல் செலவுக்காக பயன்படுத்த வேண்டும். அதற்காக புதிய வங்கி கணக்கு தொடங்கி, அதன் மூலம் செலவினங்களை பராமரிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறது. பழைய வங்கி கணக்கு என்றால், அது குழப்பத்தை உண்டாக்கும். இருப்பினும் சில வேட்பாளர்களுக்கு பழைய வங்கி கணக்கு பாஸ்புக்கை ஏற்றுக்கொள்கிறோம் என்றும் தெரிவித்துள்ளனர்.

Recent Posts

7ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில் முகலாயர் பாடங்கள் நீக்கம்.., கும்பமேளா சேர்ப்பு?

7ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில் முகலாயர் பாடங்கள் நீக்கம்.., கும்பமேளா சேர்ப்பு?

டெல்லி : தேசிய கல்விக் கொள்கையை மத்திய அரசு நடத்தும் பள்ளிகளிலும், தேசிய கல்வி கொள்கையை பின்பற்றும் தனியார் பள்ளிகளும்…

1 hour ago

“தமிழ்நாட்டில் எந்த விதத்திலும் மதவாதம் நுழைய முடியாது” – முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்.!

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய 9 அறிவிப்புகளை அறிவித்தார்.…

1 hour ago

காஷ்மீர் தாக்குதல் : பிபிசி தொலைக்காட்சி மீது மத்திய அரசு அதிருப்தி.!

டெல்லி : கடந்த வாரம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து செய்தி வெளியிட்டதற்காக…

2 hours ago

தமிழ்நாடு போலீசுக்கு நாங்க என்னென்ன செய்திருக்கோம் தெரியுமா? முதலமைச்சர் போட்ட பட்டியல்…

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவல்துறை மானியம் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது அரசு…

2 hours ago

அடிக்குற வெயிலுக்கு மழை அப்டேட்.! இந்த 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.!

சென்னை : தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் மாதத்திலிருந்து கடும் வெப்பம் கொளுத்தி வருகிறது. இந்த வேளையில், சில இடங்களில்…

2 hours ago

கேரள முதல்வர் பினராயி விஜயனின் அலுவலகம், வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்.!

திருவனந்தபுரம் : கேரள மாநில முதல்வர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.  இதையடுத்து, அனைத்து வளாகங்களிலும் சோதனை நடத்த…

2 hours ago