நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பதால், புதிய வங்கி கணக்குகளை தொடங்க வேட்பாளர்கள் திண்டாட்டம்.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுக்க கடந்த 28-ஆம் தேதியில் இருந்து பெறப்பட்டு வருகிறது. வேட்புமனு தாக்கல் இன்றுடன் முடிவடைய உள்ளது. இதனால் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்களை வேகமாக தாக்கல் செய்து வருகின்றனர். இந்த நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வேட்பு மனுவோடு புதிய வங்கி கணக்கிற்கான பாஸ்புக் கேட்கப்படுவதால் வேட்பாளர்கள் சிரமத்துக்கு உள்ளாகி வருகிறார்கள்.
வேட்புமனு தாக்கல் செய்ய இன்று இறுதி நாள் என்பதால், வங்கி கணக்கு துவங்க அரை நாள் செலவிட வேண்டிய கட்டாயத்தில் வேட்பாளர்கள் உள்ளனர். வேட்புமனு தாக்கல் செய்ய வரும் போது தங்கள் மனுவில் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் குறித்த விவரம், மனைவி பெயரில் உள்ள சொத்துக்கள் குறித்த விவரங்கள் உள்ளட்டவை தெரிவிக்க வேண்டும்.
மேலும், ஆதார், பான்கார்டு ஜெராக்ஸ், வாக்காளர் அடையாள அட்டை, 5 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, 5 ஸ்டாம் சைஸ் போட்டோ ஆகியவற்றை சமர்ப்பித்து வருகின்றனர். இதே நேரத்தில் வேட்பாளர் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் புதிய கணக்கு தொடங்கி அதற்கான பாஸ்புக்கை சமர்ப்பிக்க தேர்தல் ஆணையத்தால் கேட்டு கொள்ளப்படுகிறது.
இதனால் வேட்பாளர்கள் கடைசி நநேரத்தில் வங்கியில் காத்திருந்து வங்கி கணக்கு தொடங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். சிலர் புதிய வங்கி பாஸ்புக்கை மட்டும் மறுநாள் சமர்ப்பிக்கிறேன் எனக்கூறி வருகின்றனர். இதுபோன்று நெல்லை உள்ளிய சில மாநகராட்சியில் பல வேட்பாளர்கள் புதிய வாங்கி கணக்கு தொடங்க திண்டாடி வருகின்றனர்.
இதுதொடர்பாக அதிகாரிகளில் கூறுகையில், மாநகராட்சி தேர்தலை பொறுத்தளவில் வேட்பாளர்கள் ரூ.85 ஆயிரம் மட்டுமே தேர்தல் செலவுக்காக பயன்படுத்த வேண்டும். அதற்காக புதிய வங்கி கணக்கு தொடங்கி, அதன் மூலம் செலவினங்களை பராமரிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறது. பழைய வங்கி கணக்கு என்றால், அது குழப்பத்தை உண்டாக்கும். இருப்பினும் சில வேட்பாளர்களுக்கு பழைய வங்கி கணக்கு பாஸ்புக்கை ஏற்றுக்கொள்கிறோம் என்றும் தெரிவித்துள்ளனர்.
லக்னோ : இன்று ஐபிஎல் 2025 போட்டியில் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்…
லக்னோ : இன்று (ஏப்ரல் 1) நடைபெறும் ஐபிஎல் 2025 சீசனின் 13வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ்…
சென்னை : தமிழ் சினிமாவில் கமர்சியல் படங்கள் மூலம் எடுத்து ஹிட் கொடுத்து சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இயக்குனர்…
லக்னோ : தேசிய கல்வி கொள்கை 2020-ல் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய கோட்பாடுகளில் ஒன்று மும்மொழி கொள்கை. இந்த மும்மொழி கொள்கை…
கேரளா : மலையாள நடிகர் மோகன்லாலின் ''எம்புரான்'' படம் ஒரு புறம் வசூல் சாதனை செய்தாலும், மறுபுறம் சர்ச்சைகளால் சூழந்துள்ளது.…
சென்னை : ஐபிஎல் திருவிழா ஆரம்பித்துவிட்டது. அதில் வழக்கம் போல புதிய இளம் வீரர்கள் நட்சத்திரங்களாக ஜொலிக்க ஆரம்பித்துள்ளனர். அவர்களுடன்…