அதிமுக வேட்பாளர்களை இறுதி செய்வதில் ஓபிஎஸ் – இபிஎஸ் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதிமுகவில் வேட்பாளர்கள் தேர்வு செய்வதில் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீசெல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் கூறப்படுகிறது. அதிமுகவில் வேட்பாளர்களை இறுதி செய்வது குறித்த ஆலோசனை கடந்த இரண்டு நாட்களாக சென்னை ராயப்பேட்டை அதிமுக அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.
அதிமுகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. அதிமுக நேரடியாக போட்டியிடும் மற்ற தொகுதிகளுக்கான வேட்பளர்கள் தேர்வு செய்வதில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதாக கூறப்படுகிறது. தங்களது ஆதரவாளர்களுக்கு தொகுதிகளை ஒதுக்குவதிலும், வேட்பாளர்களை தேர்வு செய்வதிலும் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று அதிமுக தலைமையில் மகளிர் தின விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் முதல்வர் மற்றும் துணை முதல்வர் இருவரும் கலந்துகொள்வதாக இருந்தது. கடைசி நேரத்தில் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்ற மகளிர் தின விழாவில் முதல்வர் பழனிசாமி கலந்துகொள்ளவில்லை. அதேநேரத்தில் முதலமைச்சர் பழனிசாமி, அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணியுடன் தனது இல்லத்தில் ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
சென்னை : இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதும் ஐபிஎல் போட்டி சென்னை சேப்பாக்கம்…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடின. சென்னை சேப்பாக்கத்தில்…
சென்னை : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. சென்னை…
சென்னை : கத்தோலிக்க சபையின் 266-வது திருத்தந்தையாக 2013 மார்ச் 13 முதல் பதவி வகித்த போப் பிரான்சிஸ் கடந்த…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ்…