தமிழகத்தில் 27 மாவட்டங்களுக்கு மட்டும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெற்றது. நேற்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. ஒரு சில மாவட்டங்களில் இழுபறி நிலை நீடித்து வரும் நிலையில் அநேக இடங்களில் வேட்பாளர்களின் வெற்றி அறிவிக்கப்பட்டு வருகிறது. அதில் பெரும்பாலும் திமுக முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே உள்ள மாயாகுளம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு, சுயேட்சை வேட்பாளர்களாக பஞ்சவள்ளி, சரஸ்வதி ஆகியோர் போட்டியிட்டனர். இதனையடுத்து முத்துப்பேட்டை கௌசானல் கல்லூரியில் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கை முடிவில், இருவரும் தலா 664 வாக்குகள் பெற்று சமநிலையில் இருந்ததால், மறுவாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டது.
அதிலும் இருவரும் சமவாக்குகள் பெற்று இருந்ததால், மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் முன்னிலையில் குலுக்கல் முறையில் வெற்றி வேட்பாளராக சரஸ்வதி தேர்வு செய்யப்பட்டார். இதற்கு மற்றொரு வேட்பாளர் பஞ்சவள்ளி அதிருப்தி தெரிவித்தார். தேர்தல் விதிமுறை படி இருவரின் ஒப்புதலோடு குலுக்கல் முறையில் வேட்பாளர் தேர்வு செய்யப்பட்டு உள்ளதாக ஆட்சியர் வீரராகவராவ் தெரிவித்தார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…