மக்கள் நீதி மய்யம் சார்பில் 2வது நாளாக இன்று வேட்பாளர் நேர்காணல் தொடங்கியது., நாளை முதல் தேர்தல் பிரச்சாரம்.!

Published by
பாலா கலியமூர்த்தி

மக்கள் நீதி மய்யம் சார்பில் 2-வது நாளாக இன்று வேட்பாளர் நேர்காணல் – கமல்ஹாசன் தலைமையிலான குழு நேர்காணல் நடத்துகிறது.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவித்ததை தொடர்ந்து அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களது கூட்டணி, தொகுதி பங்கீடு மற்றும் வேட்பாளர் நேர்காணல் என தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வருகிறது. அந்த வகையில் நேற்று மக்கள் நீதி மய்யம் சார்பில் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்த, நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்களை அழைத்து, கமல் தலைமையிலான தேர்வு குழுவினர் நேர்காணல் நடத்தினர்.

இந்த நேர்காணலில் துணை தலைவர் மகேந்திரன், பழ.கருப்பையா உள்ளிட்ட  முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். நேர்காணலில், வேட்பாளரின் சொத்து விபரம், தனித் திறன், கல்வி உள்ளிட்ட விபரங்களுடன் தேர்தலில் நிற்பதற்கான காரணம், ஊழல் செய்தால் வெளியேற்றப்படுவோம் என்ற உறுதிமொழி உள்ளிட்ட விஷயங்கள் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் இரண்டாவது நாள் வேட்பாளர் நேர்காணல் தொடங்கியுள்ளது. சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அலுவலகத்தில் திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, நெல்லை, கரூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இருந்து விருப்ப மனு கொடுத்த நபர்களிடம் நேர்காணல் நடைபெற்று வருகிறது.

இதனிடையே, மார்ச் 7ல் மக்கள் நீதி மய்யம் கட்சியின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும் கமல்ஹாசன் அறிவித்துள்ளார். மேலும், நாளை தேர்தல் பிரசாரத்தை மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தொடங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…

57 mins ago

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

9 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

21 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

1 day ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

1 day ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

1 day ago