கஜா புயலால் தேர்வுகள் ரத்து …!பல்கலைக்கழகங்கள் அறிவிப்பு …!

Default Image

இன்று புயல் காரணமாக பல பல்கலைக்கழக தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

கஜா புயல் காரணமாக காரைக்குடி அழகப்பா பல்கலைகழக இணைப்பு கல்லூரிகள், திருச்சி பாரதிதாசன் பல்கலைகழக இணைப்பு கல்லூரிகளில் இன்று  நடைபெறவிருந்த தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் திருவாரூர் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.அதேபோல் திருவள்ளுவர் பல்கலைகழக உறுப்பு கல்லூரிகள் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது.

மேலும் தொழில் நுட்ப கல்வி இயக்கம் வெளியிட்ட அறிவிப்பில் , இன்று நடைபெறவிருந்த பாலிடெக்னிக் கல்லூரி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.இன்று நடைபெறவிருந்த தேர்வு வருகின்ற 24 ஆம் தேதிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்