இனியும் நம் கண்மணிகளின் உயிரை `நீட்’ காவு வாங்குவதை வேடிக்கை பார்க்கலாமா? – மநீம

Default Image

நீட் பயத்தால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து மனைவி நிஷாந்திக்கு இரங்கல் தெரிவித்து, மநீம ட்வீட். 

அரியலூரைச் சேர்ந்த மாணவி நிஷாந்தி நீட் பயத்தால் தூக்கிட்டுத் தற்கொலை செய்துள்ளார். இதற்கு இரங்கல் தெரிவித்து, மநீம ட்வீட் செய்துள்ளது.

அந்த ட்விட்டர் பதிவில், ‘இன்னும் எத்தனை உயிர்கள் பறிபோகுமோ? நீட் தேர்வு விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்! மருத்துவப் படிப்பிற்கான ‘நீட்’ நுழைவுத் தேர்வில் தோல்வி ஏற்பட்டு விடுமோ என்ற பயத்தால், அரியலூரைச் சேர்ந்த மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது மிகுந்த வேதனையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அவரது குடும்பத்தினருக்கு மநீம ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.

அனிதாவில் தொடங்கிய தற்கொலைகள் எவ்வளவு காலத்துக்கு தொடரப் போகின்றன? நீட் தேர்வை முன்வைத்து அரசியல் செய்யாமல்,இதற்கு நிரந்தரத் தீர்வுகாண அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்படவேண்டிய காலம் வந்துவிட்டது. இனியும் நம் கண்மணிகளின் உயிரை ‘நீட்’ காவு வாங்குவதை வேடிக்கை பார்க்கலாமா?’ என மத்திவிட்டுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்