இறந்தவர் சடலத்திருந்து பரவுமா கொரோனா? மருத்துவர் சங்க தலைவர் விளக்கம்!

Published by
Rebekal

சென்னையில் உயிரிழந்த மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு. இறந்தவரின் உடலிலிருந்து கொரோனா பரவுமா? மருத்துவர்கள் விளக்கம்

கொரோனா வைரஸ் தாக்கம் இந்தியா முழுவதுமே தற்போது அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில் மக்கள் அனைவரும் வீட்டிற்குள் இருக்குமாறும், காவல்துறை மற்றும் மருத்துவர்கள் தன்னலமற்று பணியாற்றும்மாறும் நிலை வந்துவிட்டது. இந்நிலையில் தற்போது சென்னை கீழ்ப்பாக்கம் 2 தனியார் மருத்துவமனை நிர்வாகத்தின் கீழ் மருத்துவராக வேலை செய்து வந்த 55 வயது மருத்துவர் ஒருவர் பாதிப்பால் இன்று உயிரிழந்தார்.

அவரது உடலை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மயானத்திற்கு எடுத்துச் செல்லும் பொழுது வேலங்காடு பகுதியில் உள்ள மக்கள் ஆம்புலன்சை வழிமறித்து ஓட்டுநர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இது சம்பந்தப்பட்ட 20 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இறந்த அந்த மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய மறுக்கும் மக்கள் அவரது சடலத்தில் இருந்து கொரோனா பரவலாம் என்று அச்சப்படுவதாக கூறப்படுகிறது.  இதுகுறித்து தமிழ்நாடு மருத்துவ சங்கத் தலைவர் செந்தில்குமார் கூறும் பொழுது, இறந்தவரின் உடலிலிருந்து கொரோனா பரவும் என்பது இதுவரை உறுதி செய்யப்படாத ஒன்று. மேலும், அவர் மக்களுக்காக தன்னலமின்றி சேவையாற்றியவர் என்பதால் அவரது உடல் அடக்கம் செய்வதை எதிர்ப்பது மனிதாபிமானம் இல்லாதது என தெரிவித்துள்ளார்.

Published by
Rebekal

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

2 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

4 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

4 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

4 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

4 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

5 hours ago