தமிழகத்திற்கு தனிக்கொடி உருவாக்கப்படுமா? அமைச்சர் பாண்டியராஜன் விளக்கம்

Default Image

தமிழகத்திற்கு தனிக்கொடி வேண்டும் என்ற கோரிக்கை,முதலமைச்சர் பழனிசாமியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்று தமிழ்வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
கர்நாடக தினத்தில் அங்குள்ள மக்கள் மற்றும் அரசியல் கட்சினர் தனிக்கொடியை ஏற்றி கர்நாடக தினத்தை கொண்டாடி வருகின்றனர்.இதுபோன்று  தமிழகத்திற்கு தனிக்கொடி வேண்டும் என்ற கோரிக்கை வெகுவாக எழுந்து வருகிறது.
இந்த நிலையில் தமிழ்வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார்.அப்பொழுது அவர் கூறுகையில்,பல்வேறு தரப்பினரிடம் இருந்து தமிழகத்திற்கு தனிக்கொடி வேண்டும் என்ற கோரிக்கை,முதலமைச்சர் பழனிசாமியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்று தெரிவித்தார்.மேலும் முதலமைச்சர் இந்த கோரிக்கையை ஏற்றால் விரைவில் தமிழகத்திற்கு தனிக்கொடி உருவாக்கப்படும் என்று தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்