காங்கிரஸ் கட்சியில் தொண்டர்கள் சரியில்லை எனவும் அடுத்த தடவை இதைவிட குறைவாகத்தான் சீட்டுகள் கிடைக்கும்.,காரைக்குடி தொகுதியை திருப்பி கொடுத்துவிடலாமா? என்று ப.சிதம்பரம் காரைக்குடியில் நடைபெற்ற பூத் கமிட்டி கூட்டத்தில் பேசியுள்ளார்.
சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு 25 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.இந்த தொகுதிப்பங்கீடு நீண்ட இழுபறிக்கு பின்னர் பலகட்ட பேச்சுவார்த்தையை அடுத்து முடிவுக்கு வந்தது.காங்கிரசுக்கு, கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி உள்ளிட்ட 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் பூத் கமிட்டி கூட்டம் காரைக்குடியில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தலைமையில் நேற்று காலை நடைபெற்றது.இதில் கலந்துகொள்ள காங்கிரஸ் பொறுப்பளர்கள் அதிகம் பேர் வரவில்லை.இதனையடுத்து வந்திருந்த பொறுப்பாளர்களிடம் பேசிய ப.சிதம்பரம் ,கட்சி என்றால் கடமை உணர்வுடன் வர வேண்டும் .
இதே நிலை நீடித்தால் அடுத்த தேர்தலில் 25 சீட்டுகள் கூட தரமாட்டார்கள்,காரைக்குடி தொகுதியை திருப்பி கொடுத்துவிடலாமா ? காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் சரியில்லை என்றால் தோழமை கட்சிகளை நம்பியே தேர்தலை சந்திக்க வேண்டும் என்று பேசியுள்ளார்.
கடந்த சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் 41 தொகுதிகள் கிடைத்தது.அதில் நாம் 8 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றோம்.இதே நிலைமை நீடித்தால் அடுத்த தடவை இதைவிட குறைவாகத்தான் கிடைக்கும் என்று வேதனையுடன் தெரிவித்தார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…