செத்தால்தான் சாதிச் சான்றிதழ் கிடைக்குமா? – மநீம

Published by
லீனா

சாதி சான்றிதழ் கிடைக்காததால் நீதிமன்ற வளாகத்தில் வேல்முருகன் என்பவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவத்திற்கு மநீம கண்டனம் தெரிவித்துள்ளது. 

காஞ்சிபுரம் படப்பையைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி வேல்முருகன். நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த இவர், 10ம் வகுப்பு படிக்கும் மகனின் கல்விக்காக சாதிச் சான்றிதழ் கோரி 5 ஆண்டுகளாக ஸ்ரீபெரும்புதூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் போராடியுள்ளார். மலைக்குறவர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதற்கான சாதிச் சான்றிதழுக்காக பலமுறை அலைந்தும் பயனில்லை.

மனம் வெறுத்துப்போன வேல்முருகன் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதற்க்கு மக்கள் நீதி மய்யம் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், வேல்முருகனை இழந்த அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள். வேல்முருகனின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம், குழந்தைகளுக்கு கல்வி, அரசு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்.  இதுபோல ஏற்கெனவே பலரும் சாதிச் சான்றிதழ் கிடைக்காமல் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர்.

பழங்குடிகளுக்கு சாதிச் சான்றிதழ் கொடுக்கும் அதிகாரம் மாவட்ட வருவாய் அலுவலர்களுக்கு இருந்தாலும், அவர்கள் கள ஆய்வு மேற்கொண்டு, சாதிச் சான்றிதழ்கள் வழங்காமல் காலதாமதம் செய்வதாக தொடர்ந்து புகார்கள் எழுகின்றன. இதேபோல, வெவ்வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்கள், சாதிச் சான்றிதழ் கிடைக்காமல் பரிதவிக்கின்றனர்.

இனியும் தற்கொலைகள் தொடராமல் இருக்க, சாதிச் சான்றிதழ் வழங்கும் நடைமுறைகளை எளிமைப்படுத்தி, குறிப்பிட்ட காலத்தில் சான்றிதழ் வழங்க வேண்டும். இதில் அலட்சியம் காட்டும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பழங்குடியினர், ஆதிதிராவிடர் உள்ளிட்ட வகுப்புகளைச் சேர்ந்தவர்களுக்கு சாதிச் சான்றிதழ் வழங்க மறுப்பது, அரசியல் சாசன சட்டத்துக்கு எதிரானது.

அனைவருக்கும் சமநீதி வழங்குவதே திராவிட மாடல் அரசின் நோக்கம் என்று கூறிக் கொள்ளும் திமுக அரசும், தமிழக முதல்வரும் பழங்குடியின மக்களின் வாழ்வில் ஒளியேற்ற முன்வர வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது.’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recent Posts

சிறகடிக்க ஆசை சீரியல்.. மீனாவுக்கு கெட்ட நேரமா?. ரோகிணி போடும் அடுத்த குண்டு..!

சிறகடிக்க ஆசை சீரியல்.. மீனாவுக்கு கெட்ட நேரமா?. ரோகிணி போடும் அடுத்த குண்டு..!

சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து  மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…

16 mins ago

“திருப்பதியில் ‘மகா பாவம்’ செய்துவிட்டனர்” குமுறும் முன்னாள் தலைமை அர்ச்சகர்.!

திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…

18 mins ago

ENGvsAUS : ‘டிராவிஸ் ஹெட்’ ருத்ரதாண்டவம்! 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி!

நாட்டிங்ஹாம் : இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒரு…

50 mins ago

போரில் வெற்றி பெற்றாரா ஹிப்ஹாப் ஆதி? “கடைசி உலகப் போர்” டிவிட்டர் விமர்சனம் இதோ!

சென்னை : இசையமைப்பாளராக நம்மளுடைய மனதை கவர்ந்த ஹிப் ஹாப் ஆதி தன்னுடைய முதல் படமான மீசையை முறுக்கு படத்தின்…

1 hour ago

துணை முதல்வர் கேள்வி., “அரசியல் வேண்டாம்” ஒதுங்கிய ரஜினிகாந்த்.!

சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்ற பேச்சுக்கள் தற்போது தமிழக…

1 hour ago

திருப்பதி லட்டு விவகாரம் : “இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்களா?” இயக்குநர் மோகன்ஜி காட்டம்!

சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…

3 hours ago